தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தீவிரமடையும்.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்று சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வானிலை தீவிரமடையும்.
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களிலும் மழை படிப்படியாக பரவலாகும். இன்றும், நாளையும் காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை தீவிரமடையும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டில் எங்கும் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் செல்லவில்லை.. நேற்று சேலத்தில் அதிகபட்சமாக 36.6 டிகிரி செல்சிய வெப்பம் பதிவாகியுள்ளதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் தணிந்தே காணப்படும் எனவும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
