நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். கரூரில் நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று கரூரில் விபத்து நடந்த வேலுசாமிபுரம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
விஜய் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திய வாகனம் நின்ற இடம், சாலையின் அகலம் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடங்களை அதிகாரிகள் துல்லியமாக அளவீடு செய்தனர். இவை அனைத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டன. இதுமட்டுமல்லாமல், பிரச்சார வாகன ஓட்டுநரிடமும் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
