தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 15-ம் தேதி நாகர்கோவில் வருகை தருகிறார். அன்று மாலை நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி வரை பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ (Road Show) பிரச்சாரம் செய்கிறார். இந்த ரோடு ஷோவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

பிரதமரின் இந்தப் பயணத் திட்டத்தின்படி, அவர் முதலில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வந்திறங்குகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ரோடு ஷோ நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களில் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்திற்கு வருவது இது 4-வது முறையாகும். சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரின் இந்தத் தொடர் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த நாகர்கோவில் ரோடு ஷோ திட்டமிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version