நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக ரூ.1,020 கோடி ஊழல் புகாரை முன்வைத்து, அதிமுக தரப்பு முக்கிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு டெண்டர்களில் (Tenders) மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது. குறிப்பாக, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 7.5% முதல் 10% வரை கமிஷன் பெறப்பட்டதாகவும், அந்தத் தொகை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அளித்த 258 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக அதிமுக எம்.பி. இன்பதுரை உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க நேற்று (பிப்ரவரி 20, 2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களில் வாட்ஸ்அப் உரையாடல்கள், பணப்பரிமாற்ற விவரங்கள் மற்றும் டெண்டர் முறைகேடுகளுக்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், தன் மீதான புகார்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், இதனைச் சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்திருந்தார்.

https://x.com/AIADMKOfficial/status/2025079283576676777?

இந்தநிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் முக்கிய ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. அதில், 51 வது பக்கத்தில் டெண்டர்களுக்கான 7.5% – 10% வரையிலான கமிஷன் (Party Fund) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அமைச்சர், அவரது மகனை காப்பாற்றவே காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் இருப்பதாகவும் சாடியுள்ளது.

மேலும் அந்த பதிவில் தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால்,தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!

“தியாகி” பாலாஜிக்காக வந்த “தொட்டுப் பார், சீண்டிப் பார்” வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?

செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!

நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!

இன்னும் இரண்டே மாதங்கள் தான்… அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி! என்று பதிவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version