ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்பதாகவும், அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் கூடி விவசாயிகள் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 ஆற்காடு அடுத்த ஆயிலம் பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்மணிகளைக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் விவசாயிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தும் கடந்த இரண்டு மாதங்களாக கொள்முதல் செய்யப்படாமல் சுமார் 10 ஆயிரம் மூட்டைகள் நிலைய வளாகத்தில் தேங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு 50 முதல் 60 வரை அதிகாரிகள்  வசூலிப்பதாகவும் அதேபோல் முறையாக வரிசையில் மூட்டைகளை அனுப்பாமல் சில நபர்களிடம் லஞ்சம் பெற்று அனுப்புவதாகவும் எழுந்த புகாரின் பேரில் விவசாயிகள் ஏராளமானோர் நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும்  அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் லாரியை சிறை பிடித்து கொள்முதல் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் கூறுகையில், “ தற்போது அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள்  மழையில் அபாயம் உள்ளதாகவும்.

அதேபோல் நெல்லை நிரப்பதற்கு முறையாக சாக்குப் பைகள் வரவில்லை என அதிகாரிகள் அலட்சியத்துடன் பதில் தருவதாகவும் அநாகரீகத்துடன் பேசுவதாகவும் குற்றம்சாட்டினர்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விஜய்யும், இங்குள்ள தவெக எம்.எல்.ஏவும்  முறைகேடு அதிகாரிகளை மாற்றி  நெல்மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version