புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வரும் நேற்று ஒரே நாளில் மட்டுமே சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800க்கும், சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையும் மாலையும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது. கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350 குறைந்து ரூ.15,850க்கும், சவரனுக்கு ரூ.2,800 குறைந்து ரூ.1,26,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சரிந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.500 குறைந்து ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று காலை வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும்,கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பிற்பகல் வெள்ளி விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.30,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று மட்டும் வெள்ளி கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.85 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version