வழக்கறிஞர் கீ.சு.குமார் எழுதிய “சென்னை ஐ.ஐ.டி-யில் சாதித் தீ”  எனும் நூலின் ஆங்கிலப் பதிப்பாக வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது.

கல்வி நிறுவனங்களில் நிலவும் சமூகச் சூழல்கள் குறித்த விவாதங்கள் மேலெழுந்து வரும் நிலையில், வழக்கறிஞர் கீ.சு.குமார் எழுதிய “THE BURNING FIRE OF CASTE IN CHENNAI IIT” எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நூல், “சென்னை ஐ.ஐ.டி-யில் பற்றி எரியும் சாதித் தீ” என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பாகும். உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகள் மற்றும் சவால்களை மையப்படுத்தி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

மே 2ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நூல் வெளியீட்டு விழா நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மை அரங்கில் இந்த அறிவுசார் நிகழ்வு நடைபெற உள்ளது.

சமூக மற்றும் அரசியல் களத்தின் முக்கியத் தலைவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு தலைமையுரையாற்றுகிறார்.

சமூக நீதி மற்றும் கல்வி சார்ந்து இயங்குபவர்கள் மத்தியில் இந்த நூல் வெளியீடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version