ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்பதில் தவறில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே, “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” எனும் குரல் தமிழக காங்கிரஸுக்குள் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகைக்குப் பின் இந்த கோரிக்கை மேலும் கவனம் பெற்றுள்ளது.

ஆனாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பே அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார். இதற்கு பெருமளவில் எதிர்ப்பு காட்டாத தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த புகைச்சலை சமாளிக்கும் வகையில், ஐ.பெரியசாமி கூறியது அவரது கருத்து, ஆட்சி அதிகாரம் குறித்து ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என்று கூறியிருந்தார்.

மேலும் இதுதொடரபாக நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கென்று தனித்துவமான வாக்கு வங்கி இருக்கிறது. அதனால், மற்ற கட்சிகள் எதிர்பார்ப்பதைப் போலவே காங்கிரஸ் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள்” என்றார்.

மேலும், “பாஜகவை எதிர்க்க இப்போது மட்டுமல்ல, எப்போதும் திமுகவும் காங்கிரஸும் இணைந்தே செயல்படும் என்று கூறிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது என்பது காங்கிரஸின் உரிமை என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version