Close Menu
    What's Hot

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை – 5 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை – 5 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    boatsss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டித்வா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘டித்வா’ (Ditwah) புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த புயல் வருகிற 30ஆம் தேதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்த புயல் காரணமாக, வருகிற 30 ஆம் தேதி வரை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், 5-வது நாளாக இன்று விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால், சுமார் 3,000-க்கு மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மழையால் மீன் விற்பனை நடைபெறாததால், துறைமுகங்களில் மக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து, துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களுக்கு புயல் தொடர்பாக அறிவிக்கும் வகையில், கடந்த சில நாட்களாக 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், நேற்று இரவு முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் மிதமான மழை பரவலாக பெய்து வருவதால், ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மோசமான வானிலையை உணர்த்தும் வகையில், வஉசி துறைமுகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையிலும், மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கவில்லை. இதனால், மழையில் நனைந்தபடியே குடையை பிடித்துக்கொண்டு மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2009இல் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு ரத்து
    Next Article ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து – பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு
    Editor TN Talks

    Related Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    December 26, 2025

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    நைஜீரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்; அதிபர் டிரம்ப் தகவல்

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.