இ-சேவை, ஆதார் மையங்களுக்கு இன்றும், நாளையும் 2 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு கேபிள் டிவி பொது மேலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இசேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் இன்றும், நாளையும் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடைபெற உள்ளது.
ஆதலால் இன்றும் ( 31.12.2025), நாளையும் (01.01.2026) இ-சேவை மையங்கள், ஆதார் சேவை மையங்கள் செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, மையங்கள் 02.01.2026 முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் அரசு கேபிள் டிவி பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
