தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. இருப்பினும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி வளாகத்திற்குள் நுழைந்த வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் 6 மணிக்குள் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, அவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, பொதுமக்களின் பேராதரவு மற்றும் நீண்ட வரிசையைக் கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திற்குத் (ECI) கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த மையங்களில், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகள் பாதுகாப்பாகச் சீல் வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளன. 5 மணி நிலவரப்படியே 82 சதவீதத்தைக் கடந்திருந்த வாக்குப்பதிவு, இந்த கூடுதல் நேர அனுமதியால் இறுதி நிலவரத்தில் தமிழக தேர்தல் வரலாற்றிலேயே ஒரு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 5 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
அரியலூர் – 83.09%
செங்கல்பட்டு – 82.41%
சென்னை – 81.34%
கோவை – 82.33%
கடலூர் – 81.91%
தர்மபுரி – 87.28%
திண்டுக்கல் – 86.35%
ஈரோடு – 87.59%
கள்ளக்குறிச்சி – 84.22%
காஞ்சிபுரம் – 84.92%
கரூர் – 89.32%
கிருஷ்ணகிரி – 82.40%
மதுரை – 77.89%
மயிலாடுதுறை – 78.41%
நாகப்பட்டினம் – 83.15%
நாமக்கல் – 87.63%
பெரம்பலூர் – 82.75%
புதுக்கோட்டை – 81.55%
ராமநாதபுரம் – 74.41%
ராணிப்பேட்டை – 86.28%
சேலம் – 88.02%
சிவகங்கை – 74.44%
தென்காசி – 79.28%
தஞ்சாவூர் – 78.07%
நீலகிரி – 75.90%
தேனி – 78.73%
திருவள்ளூர் – 80.70%
திருவாரூர் – 80.65%
தூத்துக்குடி – 77.56%
திருச்சி – 82.76%
திருநெல்வேலி – 75.10%
திருப்பத்தூர் – 85.28%
திருப்பூர் – 86.33%
திருவண்ணாமலை – 85.59%
வேலூர் – 85.06%
விழுப்புரம் – 85.45%
விருதுநகர் – 82.16%.

