தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு விசிக தடையாக இருக்காது. என்றார்.
விசிக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “கூட்டணி மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணியளவில் இணையதளம் வாயிலாக விரிவான ஆலோசனை நடத்த உள்ளோம். கட்சியின் தலைவர் என்ற அதிகாரம் எனக்கு இருந்தாலும், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவை எடுப்பேன். இது ஒரு ஜனநாயக ரீதியான நடைமுறை. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, நாளை காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து விசிக-வின் இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்,” என்று தெரிவித்தார்.
கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் நேற்று முன்னாள் முதலமைச்சரை சந்தித்து பேசினோம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க இடையூறாக நாங்கள் இருக்க மாட்டோம், மக்களுடைய தீர்ப்புக்கு நான் தலை வணங்குவேன். நாங்கள் இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார்.
