தகையில்  128 ஆவது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மலர் கண்காட்சியில்  7 லட்சம் மலர்களால் பல்வேறு அலங்கார வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன கண்காட்சியின் சிறப்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது .

நுழைவு வாயில் பகுதியில் மலைகளின் அரசி நீலகிரி என்ற  சொல்லிக்கேற்ப பிரம்மாண்ட கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட மலர்கள் நுழைவு வாயில் ,மலர் காட்சி மாடத்தில் 128 வது ” FLOWER SHOW ” என்ற எழுத்துக்கள் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வரைபடம், 10 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை யும் இடம்பெற்றுள்ளன .

மலர் காட்சி திடலில்  இரண்டு லட்சம் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மலர் கண்காட்சியின் முக்கிய அலங்காரமும் திருவாரூர் ஆழித்தேர்  வைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி மகாபலிபுரம், ஏர் உழவன் மீனவன், மலை ரயில் , நீலகிரியில் மட்டுமே வாழும்  தோடர் பழங்குடிகளின் வீடு, மற்றும் கிராமிய கலைகளை  போற்றும் வகையில்  பரதநாட்டிய மங்கை, தவில், ஒயிலாட்டம், மயில் தோகை, கரகாட்டம், நாதஸ்வரம், இசைக்கலைஞர்கள் நீலகிரி மலை ரயில் போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன .

இது மட்டுமின்றி பூங்கா முழுவதும் 50,000 பூந்தொட்டிகளில் 275 வகையான  பல வண்ண வண்ண மலர்கள் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு  பூத்துக் குலுங்குகின்றன.

அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்கண்காட்சியை காண அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version