2019 நாடாளுமன்றத் தேர்தல் ஒப்பந்தத்தின்படி, ஒரு மாநிலங்களவை மற்றும் ஒரு மக்களவை இடத்தைப் பெற்ற மதிமுக, தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலிலும் ஒரு இடத்தைப் பெறுவதற்கு திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கோரிக்கையின் பின்னணி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. இந்தச் சூழலில், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்படும்போது இது குறித்துப் பேசிக்கொள்ளலாம் என திமுக தலைமை தெரிவித்திருந்தது.

 

தற்போது மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுக ஒரு இடம் வழங்க வேண்டும் என திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version