தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் நால்வரை நியமிப்பதற்கான தேர்வுப் பட்டியலைத் தயாரிக்கும் தேடல் குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் (மத்தியச் சட்டம் 22/2005) பிரிவு 15(3)-இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுத் தலைவரிடம் பரிந்துரைப் பட்டியலை வழங்குவதற்காக இந்த தேடல் குழு செயல்படும்.
இந்தத் தேடல்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஆர்.எஸ்.ராமநாதனும், உறுப்பினர்களாக மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஆ. அதிகாரி சுடலைக்கண்ணன் ஆகியோரை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, மாநில தகவல் ஆணையராக உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்னாள் துணை பதிவாளர் வி.விஜய ராம் உள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தின் உறுப்பினர்கள் 6 பேர் என இருந்த நிலையில், அதன் எண்ணிக்கை 8 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டு, .
காலியாக இருந்த இடங்களுக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டனர்.
தற்போது ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், புதிய தகவல் ஆணையர்களை நியமிப்பதற்காக இந்த தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
