Author: Editor TN Talks

கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். அப்​போது, அங்கு ஏராள​மான ஆம்​புலன்​ஸ்​கள் வந்​தன. சேலத்​தைச் சேர்ந்த எஸ்​.ஆர்​.மணி​கண்​டன் உள்​ளிட்ட 7 பேர் ஒரு ஆம்​புலன்ஸை வழிமறித்​து, ஓட்​டுநர் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் தலைமறை​வாக இருந்த மணி​கண்​டன், கரூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம் 1-ல் சரணடைந்து முன்​ஜாமீன் பெற்​றார். இது தொடர்​பான மற்​றொரு வழக்​கில் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மணி​கண்​டன் உள்​ளிட்ட 7 பேர் நிபந்​தனை ஜாமீன் பெற்​றனர். இந்​நிலை​யில், இந்த 7 பேரும் கரூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம் 1-ல் மாஜிஸ்​திரேட் பரத்​கு​மார் முன்​னிலை​யில் சரணடைந்​தனர். பின்​னர் அனை​வரும் ஜாமீனில் சேலம் திரும்​பினர். அவர்​கள் இன்று (நவ.20) முதல் சேலம் நகர காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திடு​வர். 2-வது முறை​யாக விசா​ரணை: கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு சம்​பவம் தொடர்​பாக கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் கடந்த 13-ம்…

Read More

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (நவ.20) கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு என சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​வது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்​டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால், நகை தயாரிப்​புத் தொழில் கடுமை​யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்​நிலை​யில், வரும் மாதங்​களில் தங்​கம் விலை மேலும் அதி​கரிக்​கும் என வல்​லுநர்​கள் கணித்​துள்​ள​தாக தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு…

Read More

ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால்விடும் கட்சியாக தேமுதிக உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சார பயணம் மேற்கொண்ட பிரேமலதா அங்கு பேசியதாவது: 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேமுதிக பெறும். ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால்விடும் வகையில் தமிழகத்தில் வாக்குச் சாவடி முகவர்களை நியமித்துள்ளோம். அடுத்ததாக கடலூரில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த இருக்கிறோம். அதற்காக அனைவரும் கடலூரை நோக்கி வரவேண்டும். அந்த மாநாட்டின் வெற்றிதான் நமது 2026 தேர்தல் வெற்றிக்கான அச்சாரம். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியை அமைப்போம். எஸ்ஐஆர் பணிகளின் போது நமது வாக்கு இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். அப்படி உறுதிப்படுத்தி விட்டால் நமது வாக்கை யாரும் திருடமுடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Read More

விளை​யாட்​டுத் துறை​யில் இந்​தி​யா​வில் முதல் மாநில​மாக தமிழ்​நாட்டை உயர்த்​து​வதே நமது இலக்​காக இருக்க வேண்​டும் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். வண்​டலூர் அருகே மேலக்​கோட்​டையூரில் உள்ள தமிழ்​நாடு உடற்​ப​யிற்சி மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழக வளாகத்​தில் ரூ.5 கோடி மதிப்​பில் சர்​வ​தேச தரம் வாய்ந்த நீச்​சல் குளம் கட்​டப்​பட்​டுள்​ளது. அதே​போன்று அதே வளாகத்​தில் ரூ.2 கோடி மதிப்​பில் மேஜைப்​பந்து விளை​யாட்​டுக்​கான முதன்மை நிலை மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இவற்​றுக்​கான திறப்பு விழா  நடை​பெற்​றது. விழாவுக்கு விளை​யாட்டு மற்​றும் இளைஞர் நலத்​துறை செய​லா​ளர் அதுல்ய மிஸ்ரா தலைமை தாங்​கி​னார். இந்த நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு நீச்​சல் குளம் மற்​றும் மேஜைப்​பந்து முதன்மை நிலை மையம் ஆகிய​வற்றை திறந்து வைத்​தார். இதைத் தொடர்ந்து வி.ஐ.டி. பல்​கலைக்​கழக வளாகத்​தில் பேரூ​ராட்​சி, நகராட்​சி, மாநக​ராட்​சிகளில் உள்ள பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்கு விளை​யாட்டு உபகரணங்​கள் வழங்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்டு…

Read More

பாமக சார்​பில், திமுக ஆட்சி​யின் தொழில் முதலீடு​கள் குறித்த உண்மை நிலை என்ன என்​பதை விளக்​கும் வகை​யில் ஆவண புத்​தகம் வெளி​யீட்டு நிகழ்ச்சி எழும்​பூரில் நடந்​தது. இந்​நிகழ்ச்​சிக்கு பாமக தலை​வர் அன்​புமணி தலைமை தாங்​கி, ‘தி​முக அரசின் பொய் தொழில் முதலீடு​கள்’ என்ற ஆவண புத்​தகத்தை வெளி​யிட்​டார். இந்​நிகழ்ச்​சி​யில் அன்​புமணி பேசி​ய​தாவது: தமிழகத்​தில் ரூ.11 லட்​சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடு​கள் நடந்​திருக்​கிறது என்​றும், அதன்​மூலம் 34 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைத்​திருக்​கிறது என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தொழில்​துறை அமைச்​சர், நிதி​யமைச்​சர் ஆகியோர் தொடர்ந்து ஒரு பொய்​யைச் சொல்லி வரு​கிறார்​கள். அது பொய் என்று இந்த ஆவணம் மூலம் நிரூபித்​திருக்​கிறோம். குறிப்​பாக, 2025 செப்​டம்​பர் மாதம் வரை ரூ.11,32,575 கோடி​யில் 1,059 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​திடப்​பட்​ட​தாக​வும், இதன்​மூலம், 34,02,998 வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​கும் என அரசு தரப்​பில் கூறப்​படுள்​ளது. அதாவது, 2021-22-ம் ஆண்​டில் ரூ.68,405 கோடி மதிப்​பீட்​டில் 130 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள்…

Read More

தேசியக் கட்சியான பாஜக கூட புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து, பி டீமை உருவாக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பாரம்பரியமாக அங்கே அரசியல் செய்து வரும் அதிமுக-வின் நிலைதான் அந்தோ பரிதாபமாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்த புதுச்சேரி அதிமுக, 10 இடங்களில் போட்டியிட்டு ஐந்தில் வென்றது. அப்போது அந்தக் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனக்குத் தேவையான 15 இடங்கள் கிடைத்துவிட்டதால் ரங்கசாமி தந்திரமாக அதிமுக-வை கழற்றி விட்டார். இதனால் அப்போது ஜெயலலிதா ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். இதனால் அடுத்த தேர்தலில் தனித்தே களம் கண்ட அதிமுக, 4 இடங்களைப் பிடித்தது. கடந்த முறை, ரங்கசாமியையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, அனைத்திலும் தோற்றது. இந்தத் தோல்விக்குக் காரணம் பாஜக தான் என தமிழகத்தை போலவே முடிவெடுத்த புதுச்சேரி அதிமுக,…

Read More

அதிமுக-வை ஒருங்கிணைப்பதற்காக தொண்டர்கள் மீட்புக் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் 24-ம் தேதி சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார். இதில் என்ன ‘புரட்சிகரமான’ முடிவை எடுக்கப் போகிறார் என்று தெரியாத நிலையில், அவரது அடுத்த மூவ் குறித்து கலர் கலராய் செய்திகள் பத்திரிகைகளில் இடம் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்டு ஓபிஎஸ் பின்னால் அணி வகுத்த முக்கிய தலைகளில், ஒரத்தநாடு வைத்திலிங்கமும், முதுகுளத்தூர் ராமர் எம்பி-யும் தான் தற்போது மிஞ்சி நிற்கிறார்கள். அதிலும் வைத்திலிங்கம் எந்த நேரத்திலும் எந்தப் பக்கமும் சாயலாம் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம், யாரைச் சேர்த்தாலும் ஓபிஎஸ், தினகரனை கட்சிக்குள் விடவே மாட்டேன் என்று கறாராய் நிற்கிறார் இபிஎஸ். என்றாலும் இவர்கள் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகளை இன்னமும் கைவிடவில்லை பாஜக. இதனால் இன்னும் காலம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் இபிஎஸ், மெதுவாகவே அடி எடுத்து வைக்கிறார். இந்த நிலையில், ஓபிஎஸ்…

Read More

எதிர்க்கட்சிகள் எல்லாம் எஸ்ஐஆரை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க அலுப்பில்லாமல் மக்களுக்கு அரசாங்கப் பணத்தை திட்டம் என்ற பெயரில் எடுத்துக் கொடுத்து பிஹாரில் ஆட்சியை தக்கவைத்திருக்கிறது நிதிஷ் – பாஜக கூட்டணி. பிரதமர் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் சுமார் 75 லட்சம் மகளிருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதே பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்ததற்கும் ஆளும் கூட்டணி அமோக வெற்றி கண்டதற்கும் காரணி என்கிறார்கள். இதே ஃபார்முலாவை தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வேறு ரூட்டில் பரீட்சித்துப் பார்ப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் பாஜக கூட்டணி விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதை சமாளிக்கும் விதமாக தமிழகத்தில் ஆளும் திமுக-வும் கஜானா பணத்தை தேர்தல் களத்தில் இறக்கி ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். பிஹார் லெவலுக்கு ’வாரி வழங்க’ இங்கே கஜானா ’வெயிட்டாக’ இல்லை என்றாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு…

Read More

சோசியல் மீடியா மற்றும் வலைதளங்கள் அனைத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பற்றிதான். நேற்று இரவு சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவின் மேல் சவுதி அரேபியா முதலீடு செய்யப்பட்டிருந்த 600 பில்லியன் டாலர்களை இப்பொழுது 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்துப் போவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் இரு நாட்டின் பாதுகாப்பு முதல் சிவில் அணுசக்தி கூட்டு ஒப்பந்தம் வரையிலான பேச்சு இந்த விருந்தில் நடந்து முடிந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருந்தில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இலான் மஸ்க், டிம் குக், கால்பந்தாட்ட பிஃபா ப்ரெசிடெண்ட் என பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுள் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ…

Read More

தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஸ்ரேயஸ் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும், தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கமளித்துள்ளார். சின்னத்திரையில் ‘வானத்தைப் போல’, ‘அன்னம்’, ‘மருமகள்’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மான்யா ஆனந்த். அண்மையில் இவர் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளாகி, வைரலானது. தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை தொடர்பு கொண்ட நபர், தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டார். அந்த படத்தில் நடிக்க, அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என அவர் கூறியதாக மான்யா பேசியது பேசு பொருளானது. இந்தநிலையில், தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாக மான்யா விளக்கம் அளித்துள்ளார்.  அதில், தனுஷின் மேலாளர் என ஒருவர் தன்னை அணுகியதாகவும், ஆனால், அது அவரா அல்லது தன்னை ஏமாற்ற வேறு யாரேனும் அவ்வாறு செய்தார்களா என தெரியவில்லை என மான்யா குறிப்பிட்டுள்ளார். தன்னைப் பற்றி தவறான தகவல்களை…

Read More