Author: Editor TN Talks
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது முதலமைச்சர் சிபிஐ விசாரணை கேட்டதாகவும், தற்போது சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று உள்நோக்கத்துடன் சொல்கிறார் எனவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. டி.ஆர்.பாலுவினை குறுக்கு விசாரணை செய்வது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “குறுக்கு விசாரணையில் இரண்டு மூன்று வாதங்களை செய்திருக்கிறோம். நீதிமன்றத்தில் நாங்கள் ஒரு மெமோ ஃபைல் செய்திருக்கிறோம், அடுத்த வாய்தாவில் நானே வழக்கை நடத்துகிறேன் என நீதிபதியிடம் கூறினோம். அதற்கு பால் கனகராஜ் உதவி புரிவார்கள் என முறையீடு செய்ததாகவும், அதற்கு நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார். அடுத்த குறுக்கு விசாரணை நவம்பர்…
கரூர் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் உத்தரவு தொடர்பாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கரூர் சம்பவத்தில் வலி மிகுந்த நாட்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம், இதை கூற வார்த்தைகள் இல்லை. இதற்கு முன்பாக பல ஊர்களுக்கு தவெக தலைவர் விஜய் பயணம் மேற்கொண்டார். கடந்த 50 ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத எழுச்சியை மக்கள் பதிவு செய்தனர். ஆனால் சில மாவட்டங்களை விடுத்து பிற அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை. அசம்பாவிதம் நடந்த கரூருக்கு சென்ற போது காவல்துறை எங்களை வரவேற்றது, இது எங்கும் நடக்காதது. காவல்துறையே எங்களை உரிய இடத்துக்கு அழைத்து கொண்டு சென்றனர். எங்கெல்லாமல் மக்கள் வந்தனரோ அங்கெல்லாம் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்தார். கரூரை பொறுத்த வரைக்கும் அந்த சம்பவம் நடைபெற்ற போது என்னென்ன விவகாரங்கள் நடைபெற்றதோ, அது அனைத்தையும் தலைமை நீதிபதியிடம் நாங்கள்…
தமிழ்நாட்டில் 2018 முதல் 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பதினொன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புக்கு செல்லலாம் ஆனால் அதனை அரியர் தேர்வாக தொடர்ந்து எழுதி வெற்றி பெற வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தான் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் பதினொன்றாம் வகுப்பு படித்து பதினொன்றாம் வகுப்பிலே தோல்வி அடைந்தவர்களுக்கு அந்த அரியர் தேர்வு தொடர்ந்து நடத்தப்படுமா அல்லது அவையும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் இருந்து வந்தது… கடந்த ஆண்டுகளில் பிளஸ் ஒன் தேர்வு தோல்வியடைந்த மாணவர்களுக்கு தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வி துறையின்…
நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நடப்பாண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் கூட உள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கேன் என் நேரு, ஐ பெரியசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர் பி உதயகுமார், பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி கே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார். முதல் நாளில் கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அண்மையில் மறைந்த சிபு…
கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று (1.10.2025) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது. அக்கடிதத்தில், 4.9.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிஃப் சிரப் (பாராசிட்டமால், ஃபீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்), குறித்த விவரம் பெறப்பட்டது. இது தொடர்பாக, அன்றைய தினமே (01-10-2025) சுமார் 4.00 மணியளவில், துணை மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் (Senior Drugs Inspector) தலைமையிலான குழு. M/s. ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 01-10-2025 அன்றே தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது (Sales Banned). அக்குழு (01-10-2025 to 02-10-2025) மேற்கொண்ட…
யார் இந்த அஜய் ரஸ்தோகி கரூர் சம்பவத்தை விசாரிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தாகி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக பரப்புரையில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் கரூர் சம்பவத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு 1958-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிறந்தவர் அஜய் ரஸ்தோகி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் புகழ் பெற்ற சிவில் வழக்கறிஞரான ஹரிஸ் சந்திர ரஸ்தோகியின் மகன் அஜய் ரஸ்தோகி 1982-ல் சட்டத்துறையில் பயணத்தை தொடங்கிய அஜய் ரஸ்தோகி பல்வேறு சட்டப் பிரிவுகளில் பணியாற்றி வழக்கறிஞராக இருந்து பின்னர் நீதிபதியாக பொறுப்பு அரசியலமைப்பு சட்டம், சேவை சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்திய அஜய் ரஸ்தோகி 1990-ல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அஜய் ரஸ்தோகி 1990 முதல் 2004 வரை நிரந்தர நீதிபதியாக செயல்பட்ட அஜய்…
ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைத்து மூன்றாம்தர அரசியல் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமரிச்த்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மக்கள் பிரச்சனைக்கு நாங்கள் தான் முதலில் வாய் திறக்கிறோம். கண்டனம் தெரிவிக்கிறோம். ஆணவ படுகொலைக்கு சட்ட இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். மக்கள் பிரச்சனையில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது. எல்லா பிரச்சனைக்கும் காங்கிரஸ் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. இபிஎஸ் பேப்பர் படிப்பதில்லை. அவருக்கு அரசியலும் தெரிவதில்லை. வாய்க்கு வந்ததுபோல் பேசுகிறார்.எங்களுக்கு இபிஎஸ் போல அநாகரீகமாக, கொச்சையாக பேச தெரியாது. இபிஎஸ் சட்டப்பேரவையிலேயே இருப்பதில்லை. காலையில் வருவார் எழுந்து பேச வேண்டும் என்பார். வெளிநடப்பு செய்துவிடுவார். உதய்மின் திட்டம், நீட், ஜிஎஸ்டியை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆனால், அதில் இபிஎஸ் கையெழுத்து போட்டுள்ளார். தமிழ்நாட்டு உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டு, அடிமைத்தனம் செய்பவர் எங்களைப்…
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இன்னும் ஆறு அமாவாசைகள் தான் உள்ளதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு மேற்கு ஒன்றிய மற்றும் நகர கழகம் சார்பில் பூத்கள் வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழக மக்கள் திமுக ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த கொடுங்கோல் ஆட்சி மாறவேண்டுமானால் அதிமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஏக மனதாக பொதுமக்களும், தாய்மார்களும் தீர்மானித்து விட்டனர். ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இன்னும் ஆறு அமாவாசைகள் உள்ளன. 2026ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என பேசினார்.
கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடக்கிறது ,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் சிறப்பு விருதுகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையேற்று விருதுகள் வழங்கி, மலர் வெளியீட்டு விழாப் பேருரையாற்றுகிறார். தமிழ் வளர்ச்சித் மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வரவேற்புரையாற்றுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் உறுப்பினர், செயலாளர் விஜயா தயாளன் ஆகியோர் முன்னணி வகிக்கின்றனர். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் நன்றி கூறுகிறார். இவ்விழாவில்,…