Author: Editor TN Talks
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஶ்ரீகாந்த், கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இதே வழக்கில் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி, எஸ்.ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, நடிகர்கள் கிருஷ்ணா…
அவிநாசியில் ரிதன்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது விரைவான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்த திரைப்பட நடிகை அம்பிகா உருக்கமாக கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அம்பிகா, விலங்குகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனிதர்களின் உயிர்களுக்கு இருப்பதில்லை என்றார். நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வருத்தமளிப்பதாகவே உள்ளது. ரிதன்யாவின் தற்கொலையில் 11 நாட்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தாமதமாகும். மற்ற நாடுகளில் உள்ளது போல நமது நாட்டிலும் தண்டனைகள் கடுமையானால்தான் இதுபோன்ற தற்கொலை மரணங்கள் குறையும். நடிகைதானே வந்து பேசுகிறார் என நினைக்காமல் ரிதன்யாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என அம்பிகா கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்தார்.
திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜுலை 21 முதல் ஜுலை 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதன் இரண்டாவது அமர்வு ஆகஸ்ட் ஒன்று முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். இடையில் ஆகஸ்ட் 12 முதல் 18-ந் தேதி வரை கூட்டத்தொடருக்கு விடுமுறை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள், விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் விவாதிப்பதற்காக திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் வருகிற திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எம்.பி.க்கள்…
அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கடந்த 2023ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான பால வெங்கட சுப்பிரமணியன் என்ற ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகாரளித்தார். இதனடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், கைது செய்த நிலையில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னை முதன்மை…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என கேள்வி…
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன கடை பஜார் பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார் இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணி முடிந்து நேற்று இரவு திரும்பிய பொழுது திடீரென வந்த ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியகணேஷ் என்பவர் மருத்துவர் ரமேஷ்பாபுவை இழுத்து போட்டு கத்தியால் சரமாரியாக குத்தினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கத்தியால் குத்திய பாண்டிய கணேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிக…
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி, புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் புகாரை காவல்துறையினர் முடித்து வைக்கலாம் என்றும் இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றும் இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான நூற்றுக்கும்…
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் ஒன்று ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்பொது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், பள்ளி வாகனம் இழுத்து செல்லப்பட்டு, அதில் பயணித்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டதில், இரு மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு கேட் கீப்பர் ரயில்வே கேட்டை திறந்து வைத்திருந்ததால் மட்டுமே இந்த விபத்து நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணமும் அறிவித்தார். இந்த நிலையில் இது குறித்து தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. அதாவது, ”கேட் கீப்பர் வழக்கம் போல் ரயில் கேட்டை மூடி வைத்திருந்ததாகவும், ஆனால் பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக கேட்டை திறக்க வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளது. அதனால் தான் கேட் கீப்பர் கேட்டை திறந்து விட்டதாகவும், இருப்பினும் அவர் விதிகளை மீறி செயல்பட்டதால், அவரை பணி நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும்…
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றி சென்ற வாகனம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது, ரயில் மோதி வாகனம் இழுத்து செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெர்ம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும்…
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுளது. இதனால் 1-1 என இரு அணியும் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்த வீரர்கள் 3வது போட்டிக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளனர். 3வது போட்டியிலாவது இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆர்ச்சர் 42 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இருப்பினும் காயம் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகி இருந்தார். அவர் தற்போது…