Author: Editor TN Talks

1970ம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த ராமசாமிகவுண்டர், மாரப்பகவுண்டர், ஆயிக்கவுண்டர் என்ற மூன்று விவசாயிகளின் நினைவாக பெருமாநல்லூரில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று (19.06.2025) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கலந்து கொண்டு, நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசுகையில் விவசாயிகள் ஒன்று பட்டால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றார். விவசாயிகள் ஒருங்கிணைந்து நின்றால் அரசுக்கு அழுத்தம் கொடுத்து கள் இறக்க அனுமதி பெற முடியும் அப்போதுதான் தென்னை விவசாயிகள் மற்றும் பனைமரம் விவசாயம் செழிக்கும் எனவும் கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்து வெளியே பேசுவது தவறான விஷயம் எனவும் அது கட்சிகளுக்கு இடையே நடக்கக்கூடிய ஒன்று என தெரிவித்தார் மேலும் ஆன்மீகத்தை வைத்து அரசியல்…

Read More

திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சான்று ஆவணங்களாக பதிவு செய்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகியிருந்த நயினார் நாகேந்திரன் சாட்சி கூண்டில் ஏறி, சத்திய பிரமாணம் செய்து, வாக்கு மூலம் அளித்தார். அப்போது, ராபர்ட் புருசுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த சான்றளிக்கப்பட்ட…

Read More

திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தை சேர்ந்த நித்தியானந்தா என்ற ராஜசேகர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் திருந்தார். அதில், நான் பக்தராக ஆதினம் மடத்திற்குள் நுழைய தடைவிதிக்க கூடாது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைகால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மேல்முறையீட்டு மனு கூறியிருந்தார். இந்த மனு இன்று(19.06.2025) நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் கடந்த பல வருடங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைகால விதித்து உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து இந்து சமய அறநிலைய துறை,பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர் எங்கு உள்ளார். கைலாசா எங்கு உள்ளது. அங்கு எப்படி செல்வது. நீங்கள்…

Read More

அதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும்- இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்குமான நீதியும் அதுவே! என்று அதிமுக கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்து ஓராண்டு ஆனதையொட்டி அதிமுகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு.. கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு!.. 67 உயிர்கள் மரணித்தது கள்ளச்சாராயத்தால் மட்டும் அல்ல. தன் நிர்வாகத் திறமின்மையை மறைக்க பச்சைப்பொய் சொன்ன இந்த ஸ்டாலின் அரசின் கள்ளத்தனத்தாலும் தான்! மரக்காணம் மரணங்களின் போதே திருந்தாத திமுக அரசின் அலட்சியம், கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களைக் காவு வாங்கியது! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயப் புழக்கம் இருப்பதை எதிர்க்கட்சியாக எச்சரிக்கை விடுத்தோமே- அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கிடப்பில் போட்டதால் வந்த உயிரிழப்புகள் தானே இவை? சிபிஐ விசாரணை வேண்டும் என்ற அதிமுக…

Read More

திருத்தணி சிறுவன் ஆள்கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் கைது நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேசமயம் பணியிடை நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் ஆள்கடத்தல் வழக்கில் ஏடிஜிபிக்கு உள்ள தொடர்பை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாவில் பழக்கமான தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், கூலிப் படையை ஏவி, கடந்த 6-ம் தேதி தனுஷின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த தனுஷின் சகோதரனை கடத்தி சென்றனர். இது தொடர்பாக தனுஷின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக இருந்ததாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் புகார்…

Read More

கூடுதல் டிஜிபி ஜெயராம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தகவல் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஜெயராம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் வாதம்: தமிழக அரசு தரப்பில், “ஜெயராம் தொடர்பான எந்தெந்த வழக்குகள் என்பதை நாங்கள் கூற விரும்பவில்லை. ஆனால், பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் நேரடியாக விசாரணையை எடுத்துக்கொண்டு, சில உத்தரவுகளைப் பிறப்பித்து, நாங்கள் இவ்வாறுதான் செயல்பட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது போல் உள்ளது,” எனக் கூறி அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கூடுதல் டிஜிபி ஜெயராம், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை என்றும், அகில இந்திய சேவை விதிகள் அடிப்படையிலான விசாரணையைக் கருத்தில் கொண்டுதான் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. ஜெயராம் தரப்பு வாதம்:…

Read More

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகு பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்கள் மீதும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இதற்காக போராட்டம் நடைபெறும் என்றும் கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தெரிவித்தார். கடந்த 17 ஆம் தேதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைதளங்களில் கார்ட்டூன் ஒன்றை பதிவேற்றினர். அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் விதமாக இருந்ததாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதை கண்டிக்கும் விதமாக அவதூறு பரப்பியவர் மீதும் அதன் துறை அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும், கஞ்சா,…

Read More

கோவை வடக்கு மாவட்ட தி.மு.கவில் அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்து கூட்டம் போட தயாராகி வருகின்றனர். கோவை தெலுங்குபளையம் S.J மண்டபம் பின்புறம் உள்ள இடத்தில் வரும் 22-ந் தேதி இந்த கூட்டம் நடக்கவுள்ளது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவியை நீக்க கோரி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்ப உள்ளதாம். தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் உள்ள அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், முன்னாள் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகளை சந்தித்து கூட்டத்திற்கு முறைப்படி அழைப்பு விடுத்து வருகின்றனர். அதிருப்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவை மீட்க வருகை தந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம். என்று வாசகத்துடன் திமுக நிர்வாகிகளின் அலைபேசி எண்ணுடன் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக கழக முன்னோடிகள் குழுவில் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் உள்ள தி.மு.க முகநூல் பக்கம், வாட்ஸ்-அப் குரூப்புகளில் இந்த செய்தி பரவி வருகிறது.

Read More

உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில், “மனு கொடுத்தா குப்பை தொட்டிக்கு தான் போகுது” என்று பெண் ஒருவர் ஆவேசமாக பேசினார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தும்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதேபோன்று கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி, ஊராட்சியில் உள்ள பி ஆர் புரம் ஊராட்சி திருக்குவளை, கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றத. முகாமில் மனு அளிக்க வந்த பெண் தங்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் மாதம் ஒருமுறை வருவதாகவும் மின் விளக்கே எரிவது கிடையாது என்றும் கூறினார். புகார் செய்தால் போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மனு…

Read More

“தக் லைஃப்” திரைப்படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான பட தயாரிப்பாளர் தரப்பு:- கர்நாடக அரசு தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் அடிப்படையில் பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் திரைப்படம் வெளியாவதற்கும் உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கக்கூடிய அந்த விஷயங்களை ஏற்கிறோம். நீதிபதிகள் :- அப்படியெனில் வழக்கை முடித்து வைத்து விடலாமா? மனுதாரர் மகேஷ் ரெட்டி தரப்பு :- இதுபோன்று தொடர்ச்சியாக பல நேரங்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது எனவே வரும் காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் வகுக்க வேண்டும். மேலும் படம் இவ்வளவு தாமதமாக வெளியிடும் போது அதன் மார்க்கெட் போய் விடுகிறது எனவே அதற்கான இழப்பீட்டையும் உறுதி செய்யும் வகையில் வழிகாட்டு நெறிமுறை…

Read More