Author: Editor TN Talks

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் பணிக்கு தனியாக ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக அரசு நியமித்துள்ள குழுவை அணுகும்படி டாஸ்மாக் ஊழியர் சங்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்க வேண்டும். வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தற்போது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்கக் கோரியும், காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரியும், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி…

Read More

தமிழகத்திலுள்ள 18 முதல் 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் வெற்றி நிச்சயம் என்ற பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சமூக மற்றும் பொருளாதார வகையில் பின்தங்கிய வகுப்பினரான (மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கை தமிழர்கள், மீனவ இளைஞர்கள், சிறுபான்மையினர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு இளைஞர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்) என அனைவருக்கும் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் வழியாக கண்டறிந்து இத்திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஊக்கத்தொகையாக ரூ.12,000 வரை அளிக்கப்படும். 38 தொழிற்பிரிவுகளில் 165 பயிற்சிகளை 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படவுள்ளது. ZF Rabem TVS Supply chain, MRF, Saint Gobain, Ti Murugappa Groups, Brakes India, Tech Mahindra Foundation, Tata Electornics, Groom India Salon & Spa, LG, Ashok Leyland, Asahi India Glass…

Read More

அத்திக்கடவு வனப்பகுதியில் பழங்குடியின இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மான் என நினைத்து மதுபோதையில் இளைஞரை சுட்டு விட்டதாக கைது செய்யப்பட்ட உறவினர்கள் பரபரப்பு வாக்குமூலம். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் மோட்டார் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அன்சூர்,குண்டூர்,அத்திக்கடவு,சொரண்டி,மானாறு,பில்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.இங்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திக்கடவு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு சொரண்டி பகுதியை சேர்ந்த சஞ்ஜித்(23), அன்சூர் பகுதியை சேர்ந்த தாய்மாமா முருகேசன்(37),அன்சூர் பகுதியை சேர்ந்த தாத்தா பாப்பையன்(50) உள்ளிட்ட இருவருடன் சேர்ந்து முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர். மூவரும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் இளைஞர் சஞ்ஜித் நேற்று முன்தினம் காலை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அவரது உடலை உறவினர்கள் கிராமத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான்,காரமடை…

Read More

கோவை அரச மரத்தின் கிளையை வெட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, மரத்தை முழுமையாக வெட்டி சாய்க்கப்பட்டது. அதனால் மரம் வெட்டியவருக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கோவை, தெற்கு வட்டம், சபரிபாளையம் கிராமம் சண்முகா வீதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் தனியார் மருத்துவமனைக்கு முன்பு சாலை ஓரத்தில் இரண்டு அடி சுற்றளவு 10 அடி உயரத்தில் 12 வயதுடைய அரச மரம் இருப்பதாகவும், அதன் கிளை காய்ந்து மருத்துவமனை மீது சாய்ந்துவிடும் அபாயம் உள்ளதால் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து உள்ளது. மரக் கிளையை வெட்டுவதற்கு அனுமதி கோரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். சபரிபாளையம் வி.ஏ.ஓ மற்றும் ஆர்.ஐ ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ஆபத்தாக உள்ள கிளையை மட்டும் வெட்டி அகற்ற அனுமதி வழங்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தனர். உரிய வழிமுறையை பின்பற்றி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5 மணி…

Read More

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சித்தாபுதூர் பள்ளியில் நடைபெறும் இதற்கான போக்குவரத்து வசதிகள் உணவு வசதிகள் அனைத்தும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார், தேசிய மருத்துவர்கள் தினமான இன்றே நாம் இந்த இலவச நீட் தேர்வு பயிற்சி…

Read More

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைவழக்கில், நிலைமையை சரியாக கையாளாத காரணத்தால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்தனர். பின்னர் மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் அடித்து துன்புறுத்தியதில் அஜித் குமார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பந்தபட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 நாள் நீதிமன்ற காவலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் காவலாளி பலியான சம்பவத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், இந்த மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பு…

Read More

திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு.. திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை! ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும். இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் “வலிப்பு” என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின்…

Read More

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே தனியார் விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி, விடுதி வளாகத்திற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையான்குடி தாலுகா ஒச்சந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் இவரது மூத்த மகள் பிருந்தா. 14 வயதான இவர் ஆண்டிச்சியூரணியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதியில் தங்கி அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் சூசையப்பர்பட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்றுவந்துள்ளார். இன்று அதிகாலை விடுதியில் தங்கி பயின்று வரும் சக மாணவிகள் வந்து பார்த்தபோது மாணவி பிருந்தா விடுதி வளாகத்திற்குள்ளேயே மரத்தில் தூக்கிட்டபடி சடமலாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர்கள் உடனடியாக காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடம் சென்ற காவல்துறையினர் மாணவி பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read More

கடந்த காலங்களில் நடந்த தவறுகளை பேசி கோண்டு இருக்காமல், தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒன்றிய அரசு உடனடி தீர்வு கான வேண்டும் என மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெறும் ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் துரை வைகோ விமான மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”எங்களைப் பொறுத்த வரை எங்களுடைய இயக்கம் குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும் அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என தெரிவித்தார். ஆனால் இறுதி முடிவு எடுப்பது இயக்கத்தின் தலைமை என்றும் தெரிவித்தவர். அதேசமயம் நாங்கள் இத்தனை சீட்டை எதிர்பார்க்கிறோம் டிமாண்ட் ஆக வைக்கிறோம் என்ற தவறான சித்தரிப்பு இருந்ததாகவும், ஆனால் இறுதி முடிவு கூட்டணி உடன் பேசி தலைமை தான் முடிவு எடுக்கும் என தெரிவித்தார். அனைத்து…

Read More

தமிழ்நாட்டில் 2.25 கோடி ரேசன் அட்டைகள் உள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதில் மூத்த குடிமக்கள் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பித்து தங்களின் சார்பில் வேறு ஒருவரை வைத்து ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். தற்போது ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டம் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மாவத்திற்கு 10 நியாயவிலை கடைகள் என்ற அடிப்படையில் 100 நியாயவிலை கடைகளில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்…

Read More