Close Menu
    What's Hot

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கடனுக்காக பெண்ணை மரத்தில் கட்டி வைத்த நபர்… கடுப்பான முதலமைச்சர்… என்ன நடந்தது?
    இந்தியா

    கடனுக்காக பெண்ணை மரத்தில் கட்டி வைத்த நபர்… கடுப்பான முதலமைச்சர்… என்ன நடந்தது?

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திராவில் ரூ.80ஆயிரம் கடன் வாங்கிய நபரின் இளம் மனைவியை சாலையோர மரத்தில் கட்டி வைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் குப்பம் என்ற பகுதியை சேர்ந்தவர் முனி கந்தப்பா. இவர் தன்னுடைய நண்பரான திம்மராயப்பா என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.80,000 பணத்தை வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார். மாதம் ரூ.8,000 வட்டியாக கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு முனி கந்தப்பா கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கூலி வேலை செய்து வரும் திம்மராயப்பா, சில மாதங்கள் வட்டி கட்டி வந்த நிலையில், அவரால் வட்டியும் கட்ட முடியவில்லை, அதேப் போல் அசலையும் திருப்பி செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. பணத்தை கேட்டு முனி கந்தப்பா அழுத்தம் கொடுக்க, மன உளைச்சலில் இருந்த திம்மராயப்பா, தனது மனைவி ஸ்ரீஷா மற்றும் 2 குழந்தைகளை விட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

    2 3திம்மராயப்பாவின் மனைவி ஸ்ரீஷா கூலி வேலை செய்து குழந்தைகளை பார்த்துக் கொண்டு, வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்தி வந்துள்ளார். கடந்த மூன்று மாத காலமாக ஸ்ரீரிஷாவால் வட்டி செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனி கந்தப்பா, தனது குடும்பத்துடன் ஸ்ரீஷா வீட்டிற்கு சென்று கடனை திருப்பி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஸ்ரீஷாவின் முடியை பிடித்து இழுத்து சென்று சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் கட்டி வைத்துள்ளார் முனி கந்தப்பா.

    தகவலின் பேரில் அங்கு வந்த குப்பம் போலீசார் ஸ்ரீஷாவை விடுவித்ததுடன், முனி கந்தப்பா அவருடைய மனைவி, மகன், மருமகள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முதல்வரின் சொந்தத் தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது பற்றி அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் குடும்பத்தாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியப் பெருங்கடலில் உருவானது இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் !
    Next Article பஹல்காம் தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல… அமீர்கான் கருத்து…
    Editor TN Talks

    Related Posts

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    July 21, 2026

    வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்..!! வாயைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்..!!

    July 20, 2026

    மேற்கு வங்க அரசு நிர்வாகத்தில் பெங்காலி மொழி கட்டாயம்.. செப். 1ம் தேதி முதல் அமல்..!!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.