Author: Editor TN Talks

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் சிறுவனை கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி ஜெயராமன் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் கைதாகாமலிருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்,” இந்த விவகாரத்தில் சிறுவன் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம், போன் உரையாடல்களில் இருந்து, இந்த சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன எனக்கூறி, ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை கடந்த 27ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஜெகன் மூர்த்தி தரப்பில்…

Read More

தமிழகத்தில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டினரை நாடுக கடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மறறும் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்,மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 16 பேர் நீண்ட கால விசா பெற்றுள்ளனர். 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மத்திய அரசின் செல்லுபடியாகும் விசாவின் கீழ் தமிழகத்தில் தங்கியிருக்கின்றனர். வெளிநாட்டினர் பதிவு அதிகாரியான மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு இதை முறைப்படுத்த அல்லது அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. . தமிழகத்தில் தற்போது…

Read More

நிர்பந்தம் செய்தே அதிமுகவை கூட்டணிக்கு பாஜக இழுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை சேலத்தில் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு தினங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் 2026 தேர்தலில் முடிந்தவுடன் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி என கூறுகிறார். முதலமைச்சர் அதிமுகவைச் சேர்ந்தவர் தான் என சொல்கிறார். இதில் இருந்தே இபிஎஸ்-ஐ முதலமைச்சராக அமித் ஷா ஏற்கவில்லை என்பது தெரிகிறது. கூட்டணி ஆட்சியை அதிமுக ஏற்கிறதா? மறுக்கிறதா? என இதுவரை அவர்கள் பதில் சொல்லவில்லை. அதிமுகவை நிர்பந்தம் செய்து நெருக்கடி கொடுத்து தான் பாஜக கூட்டணியில் சேர்த்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை ஒரு மாநிலக் கட்சியுடன் கூட்டணி…

Read More

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் கருவியையும், 61.29 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி என மொத்தமாக 2.81 கோடி செலவில் உயர் மருத்துவ உபகரணங்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். பின் செய்தியாளர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து கூறும்போது, “4 வருடத்திற்கு முன்பு சுகாதாரத்துறை மூலம் இயங்கி வந்த 1000 மேற்பட்ட வாடகை கட்டிடங்களும், 1500 க்கு மேற்பட்ட பழமையான கட்டிடங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தற்போது 1600 புதிய கட்டடங்களை இந்த அரசு திறந்து வைத்துள்ளது. தடுப்பூசி பணிகளில் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்த கூடாது என பொது சுகாதார துறை செவிலியர் கூட்டமைப்பு சங்கம் கூறியது குறித்த கேள்விக்கு, கொரோனா தடுப்பூசி நாங்கள்…

Read More

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கொண்டு வரப்படும் இந்தப் புதிய நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும்! எனவே இது குறித்துத் தெளிவுபடுத்த, தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.. இதுதொடர்பாக தவெக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு.. பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், கடந்த 24.06.2025 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம். ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (Special Intensive Revision) என்ற ஒன்றைப் பீகாரில் முன்னெடுக்கப் போவதாக அறிவித்தது. அதன்படி, தேர்தல் ஆணைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் ஆவணங்களை, தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து. வாக்காளர் பட்டியலை இறுதி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இப்படிச் செய்வதன் மூலம் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்: தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்க முடியும்: வெளிப்படைத்தன்மையோடு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க முடியும்’ என்று இந்தியத் தேர்தல் ஆணையம் காரணம் சொல்கிறது. ஆனால், பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு…

Read More

தனிமனித பொருளாதார வளர்ந்தால் தான் முதல்வர் கூறியது போல் 2030ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் தமிழக வளர்ச்சி அடையும் என்று கள்ளக்குறிச்சியில் புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து அமைச்சர் எ.வ. வேலு பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம்,மற்றும் தினசரி காய்கறி அங்காடி கட்டிடங்கள்,குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றிற்கான ரூ.46.30 கோடி மதிப்பிலான புதிய கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொது பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில்:- தமிழக முதல்வர் 2030ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு ட்ரில்லியன் டாலர் ஆக உயரும் என கூறியுள்ளார்.அந்த பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனித பொருளாதார வளர்ச்சி -மற்றும்…

Read More

ருத்ராட்சம் அணிவது குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்து பிற்போக்குத்தனமானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கோவை மாவட்ட கல்வித் துறை சார்பில் “கற்றல் அடைவு” குறித்த ஆய்வு கூட்டம் புரூக்பீல்ட்ஸ் சாலையில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கோவை மாவட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது அதில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது, பள்ளிக்கூடம் என்பது பொதுவான ஒரு இடம் அங்கு அறிவு சார்ந்த விஷயங்களை சொல்லித் தாருங்கள் என்று அறிவுரை கூற வேண்டும் என்றார். அதை விட்டு ருத்ராட்சம் அணிவது போன்று கூறுவதை தான்…

Read More

என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ் அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணிக்கு வேண்டாம் என சொல்லப் போகிறேன் என ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் மத்தியில் அன்புமணி பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாசின் கருத்துக்களை மறுக்கும் வகையில் அன்புமணி பேசியுள்ளார். அதாவது தன்னுடைய தந்தை ராமதாஸ் சொல்லி தான் பாஜகவுடன் 2024ல் கூட்டணி பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் சரி என்று கூறியதால் தான் பாஜகவினர் தைலாபுரம் வீட்டிற்கு வந்தனர் என்றும் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது என்றும் தற்போது இல்லை என ராமதாஸ் மறுக்கிறார் என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார். அவர் வயது முதிர்வு காரணமாக ஒருகுழந்தை போல மாறிவிட்டார் அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். அதேபோன்று அதிமுகவின் சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோது அவர் எதற்காக வந்தார் என கேட்டதாகவும் அதற்கு அவர் பத்திரிகை வைப்பதற்காக வந்து சென்றார் என…

Read More

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தனது பிரசாரப் பயணத்தை ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு தொகுதியிலும் ‘ரோட் ஷோ’ நடத்தி, தேர்தல் பரப்புரை வாகனத்தில் நின்றவாறு உரையாற்ற திட்டமிட்டுள்ளார். முதற்கட்டப் பயணம் எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயணம் ஜூலை 7 ஆம் தேதி மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்கி, ஜூலை 21 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நிறைவடைய உள்ளது. இந்த முதற்கட்ட பயணத்தில், வழக்கமாக தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்படும் டெம்போ டிராவலர் பரப்புரை வாகனத்தையே அவர் பயன்படுத்த உள்ளார். பிரசார உத்தி ஒவ்வொரு தொகுதியிலும் ‘ரோட் ஷோ’: எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தின்போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு இடத்தில் ‘ரோட் ஷோ’ நடத்த உள்ளார். கேரவான் பிரசாரம்: மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தேர்தல் பரப்புரை வாகனத்தில் (கேரவான்) நின்றவாறு அவர்…

Read More

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வது குறித்து சிபிசிஐடி போலீஸார் சட்ட ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை காஞ்சிபுரம் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஐபிஎஸ் அதிகாரியான ஏடிஜிபி ஜெயராம் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அவரது மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. இதனால், சிபிசிஐடி போலீஸார் பூவை ஜெகன்…

Read More