Author: Editor TN Talks

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். கோவையில் மின் வேலியை சிக்கி தவித்து கடந்து செல்லும் காட்டு யானை குடும்பம் – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் !!!#CoimbatoreWildlife #ElephantCrossing #ViralVideo #TamilNews #WildElephants #TNForest #ElectricFence #HumanAnimalConflict #NatureInTN pic.twitter.com/D2xgGeXNuB — TNTalks (@tntalksofficial) June 11, 2025 இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்கிரி அருகே உள்ள முள்ளங்காடு பகுதியில் குட்டியுடன் இரண்டு பெண் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறின. பின்னர் மீண்டும் நேற்று காலை வனப்பகுதியை நோக்கி திரும்பி சென்றன. அப்போது முள்ளங்காடு பகுதியில் காட்டு யானைகள் வந்த போது, அப்பகுதியில் இருந்த மின்வேலி யானைகளை வழி மறித்தது. இதனால் சிறிது…

Read More

தேனி மாவட்டம் கம்பம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி (68).நாட்டு வைத்தியரான இவரது மகன் முகமது இர்ஃபான் (27).எம்.ஏ.பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு செல்வதற்காக தீவிரப் பயிற்சி எடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது அந்த வீட்டின் அருகே முஹம்மது தாஹா என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த வீட்டு மாடி வழியாக தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து முகமது இர்ஃபானின் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் முகமது இர்ஃபானை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி…

Read More

பாமகவில் ராமதாஸ் , அன்புமணி இடையே உட்கட்சி மோதல் வலுத்து வரும் நிலையில் நடைபயணம் சென்று தொண்டர்களை சந்திக்க அன்புமணி முடிவு பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக நடைபயணம் தொடங்க அன்புமணி முடிவு முதல் கட்ட நடைபயணத்தில் பாமகவிற்கு செல்வாக்கு மிக்க வட தமிழக மாவட்டங்களில் தொண்டர்களை சந்திக்கிறார் அன்புமணி (( தொகுதி தலைநகரின் முக்கிய கடைத்தெரு பகுதியில் நடந்து சென்று துண்டுச் சீட்டு வழங்குவது , ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு பெரிய கிராமங்களில் நடை பயணம் செல்வது என திட்டமிடப்பட்டுள்ளது )) தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு நடைபயணம் செல்ல உள்ளதாக கடந்த வாரம் நிர்வாகிகளை சந்தித்தபோது அன்புமணி தெரிவித்திருந்தார் வரும் 15 ம் தேதி முதல் மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களை அன்புமணி சந்திக்கிறார் மாவட்டம் தோறும் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்த பின் ஜூலை 25 முதல் நடைபயணம்…

Read More

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மாவட்டத்தில் வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக் தாகூர் (காங்.,) 3,85,256 வி.விஜய பிரபாகர் (தே.மு.தி.க.,) 3,80,877 ராதிகா (பா.ஜ.) 1,66,271 எஸ்.கவுசிக் (நாம் தமிழர்) 77,031 வாக்குகள் பெற்றனர். இதில் விஜய பிரபாகரன் 4309 வாக்குகளில் தோல்வியை சந்தித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிட்டு நல்ல வரவேற்பை பெற்றதால் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அவர் அருப்புகோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை. நேரடியாக அவர் போட்டியிடவில்லை என்றாலும் தேமுதிகவுக்கு அங்கு வாக்கு வங்கி அதிகம் இருப்பதால் சட்டமன்ற தேர்தலில் அங்கு கணிசமான தொகுதிகளில் தேமுதிக சார்பில் நிர்வாகிகளை நிறுத்த வேண்டும் என்றும் பேசப்பட்டது. எந்த கூட்டணியில் தேமுதிக பங்கேற்றாலும் விருதுநகர் மாவட்டத்தில் அதிக…

Read More

வாக்குச்சாவடி சீரமைப்புப் பணிகள் ஜூலையில் தொடங்கவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவு துணை இயக்குநர் பி.பவன், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறையில் ஆலோசனை நடத்தினார். தேர்தல் துறையில் மேற்கொள்ளப்படும் ஊடக மேலாண்மைப் பணிகள், சமூக ஊடகங்களின் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதன்பின் பிரதான ஊடகங்களின் செய்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் அக்டோபரில் தொடங்கப்படும். இந்தப் பணிக்கு முன்பாக, வாக்குச் சாவடிகளை சீரமைக்கும் பணிகள் ஜூலையில் தொடங்கும். தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 400-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியும் 1,200 வாக்காளர்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மாநிலத்தில் 1,200-க்கும் அதிகமாக…

Read More

கோவையில் அருகே வாரச் சந்தையில் மிளகாய் வியாபாரம் செய்து வந்த மூதாட்டியை கடையை எடுக்கச் சொல்லி அட்டூழியத்தில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகி வைரலாகும் வீடியோ … கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர் இந்த கடைகளை திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 3 பேர் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும்கடைக்குத் தகுந்தார் போல் ரூபாய் 100 முதல் 200 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது இதே போல் நேற்று செவ்வாய்க்கிழமை கடைகள் அமைத்து வியாபாரம் நடைபெற்று வந்த போது சுமார் 75 வயதான மூதாட்டி ஒருவர் சிறிய தட்டுகளில் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார் அங்கு வந்த குத்தகைதாரரும் ஆனைமலை திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி சந்தோஷ்குமார் என்பவர் இங்கெல்லாம் கடை போடக்கூடாது என அந்த மூதாட்டி இடம்…

Read More

சென்னையில் மின்சார வாகனங்களுக்கு முதற்கட்டமாக 9 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணிகள் 2 மாதங்களில் பணிகள் துவங்க உள்ளது இடங்கள் தேர்வு செய்து சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் அடுத்த 15 நாட்களில் டெண்டர் அறிவிக்கப்படும், அதன் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது காற்று மாசு, எரிபொருள் செலவு, தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு காரணங்களால், மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மின்சார வாகன விற்பனை தொடர்பான தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 482 மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. அதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 762 இருசக்கர…

Read More

இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கு மேலாக நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். அவரது தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் நடந்துள்ளதாக அமைச்சர் பெருமக்கள் பட்டியலிட, அவற்றுக்கு நிகரான கேள்விகளை இணையவாசிகள் முன்வைத்து வருகின்றனர். அவற்றை விரிவாகப் பார்ப்போம்.  3-வது முறையாக பாஜக ஆட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014 மற்றும் 2019 களில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்தப் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இந்தியா பணமதிப்பிழப்பு சர்ச்சையையும் எதிர்கொண்டது, உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்திற்கு உயர்ந்த சாதனையையும் சந்தித்தது. இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பாஜகவின் சாதனைப் பட்டியல்கள் சமூக ஊடகங்களை நிறைத்து வருகின்றன. அவையே, பல கேள்விகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.  சமூக ஊடகங்களில் புகழாரங்கள்  11 ஆண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்டு…

Read More

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது ஓய்வுக்கு எடுக்க இடமில்லாமல், சாலை ஓரங்களில் கூடுகிறார்கள். இந்நிலையில், இந்த ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையின் முக்கிய சாலைகளில்,ஏசி ஓய்வறையை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மாநகர ஆணையர் குமரகுருபன் தெரிவித்துள்ளார் இதில் 600 சதுரடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஓய்வறையில், 20 அடி நீளம் 10 அடி…

Read More

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து, சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க முடியவில்லை என்றும் 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு நிதி ஒதுக்காத போதிலும் சதவீத நிதியை தமிழக அரசு ஒதுக்கியதாகவும், நிதி…

Read More