Author: Editor TN Talks
சென்னையிலிருந்து சாய்நகர் சீரடி விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு தமிழக முதல்வர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காட்பாடியில் இருந்து வேலூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை வரை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் நடனங்கள் பாட்டு கச்சேரிகள் என அமைக்கப்பட்டு இருந்தது அனைத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டுக் கொண்டு வாகனத்தில் வந்தார். திமுகவினர் மேள தாளங்களுடன் மலர் தூவி வரவேற்றனர். புதிய பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மாவட்ட திமுக அலுவலகம் வரை நடந்து சென்று பொது மக்களை சந்தித்தார். பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் மகளிரிடம் கைகுலுக்கி சிரித்து பேசினார். பின்னர் வேலூரில் ரூபாய் 197 கோடியே 81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பென்ட் லென்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு க ஸ்டாலின்…
திரும்பிய பக்கமெல்லாம் “ஏங்க கூமாப்பட்டி வாங்க” என்ற கூப்பாடு கேட்டுக் கொண்டிருக்க, கோவாவை விட இன்று இளைஞர்களின் சுற்றுலாத் தல மவுசைப் பெற்றுவிட்டது விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாப்பட்டி கிராமம். இன்ஸ்டாகிராமில் கூமாப்பட்டிக்குக் கூவிக் கூவி அழைக்கும் டார்க் நைட் என்ற ஜெ.பி கோல்டு ஒரு இன்புளுயென்சர். தங்கள் ஊரின் அழகைத் தரமான விற்பனைப் பொருளாக்கி, அவர் வருமானம் ஈட்டி வருகிறார். இவரைப் போல பலரை நாம் நமது ஸ்மார்ட் போன்களில் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் ஒரு இன்புளுயென்சர் இப்படியெல்லாம் செய்யலாமா? இன்புளுயென்சர்கள் என்றால் யார்? இன்றைய டிஜிட்டல் உலகில், இந்தக் கேள்விக்குச் சிறுபிள்ளை கூட பதில் சொல்லிவிடும். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் அதிகமான பின் தொடர்வுகளைக் கொண்டவர்கள், இன்புளுயென்சர் என்று அழைக்கப்படுகின்றனர். இதைத் தமிழில் செல்வாக்கு செலுத்துபவர்கள் என்று மொழிபெயர்க்கலாம். தொடர் செயல்பாட்டின் மூலம் மக்களின் ஆர்வத்தையும் வரவேற்பைப் பெற்று, தமது கருத்துகளைச் சமுதாயக் கருத்தாக மாற்றும்…
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் கூலி. ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. அனிருத் இசையில் சிக்கிடு சிக்கா என்று தொடங்கும் இந்த பாடலை அறிவு எழுதி உள்ளார். டி.ராஜேந்தர், அனிருத், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரஜினியை எப்போதும் திரையில் பார்ப்போம் என்பதுதான். ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களுக்கும் கூட இந்த எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அந்தவகையில் சிக்கிடு சிக்கா பாடலின் வீடியோவை பார்த்தவர்களுக்கு ஏமாற்றமும், எரிச்சலும் தான் மிஞ்சியது. பெரிய அளவுக்கான ஒரு ஓபனிங் சாங்குக்கான பெப் என்பதே இல்லாமல் சமதளமான நடையில் பாடலின் இசை அமைக்கப்பட்டிருந்தது முதல் ஏமாற்றம். எப்போது பார்த்தாலும் அனிருத்தின் குரலில் ரஜினியின் பாடல் ஒலிப்பது ரொம்பவே எரிச்சலாக இருக்கிறது. மலேஷியா வாசுதேவன், எஸ்பிபி,…
தமிழ்நாடு அரசின் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் அல்லது டேப்லெட்டுகள் வழங்கும் திட்டத்திற்காக, டெல், ஏசர், லெனோவா, ஹெச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழக அரசின் பட்ஜெட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கையடக்க கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைச் செயல்படுத்தும் விதமாக, தமிழக அரசின் எல்காட் நிறுவனம் 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை வெளியிட்டது. மடிக்கணினியின் அம்சங்கள் மற்றும் டெண்டர் விவரங்கள் மடிக்கணினியில் இருக்க வேண்டிய அம்சங்களாக, 8 ஜிபி ரேம் (DDR-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (SSD), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது AMD பிராசஸர், புளூடூத் 5.0, விண்டோஸ்…
சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் கோரி பல காலமாக மாணவியர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். 152 அறைகள் இருக்கும் இந்த விடுதியில், 40 கழிப்பறைகளே உள்ளன. அறைக்கு மூன்று பேர் என, சுமார் 450க்கும் அதிகமான மாணவியர் இங்கு தங்கிப் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சேப்பாக்க வளாக மாணவியர் 115 பேரையும், பெருங்குடி வளாகத்திற்கு மாற்றியுள்ளனர். ஏற்கனவே அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாணவியர், மேலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு, வேறுவழியின்றி, நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் தலைமைச் சட்டக் கல்லூரி விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? நல்ல குடிநீர், தரமான உணவு என எதுவும் வழங்கப்படுவதில்லை. சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை…
புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து பரிந்துரைக்கும்போது குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவும், குற்ற வழக்கில் நிர்வாகிகள் சிக்கினால் தலைமைக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். திருச்சி , தஞ்சை, சேலம் , கோவை உட்பட அதிமுகவின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருப்பது குறித்தும் , பூத் கமிட்டி பணிகளை முடிக்காத மாவட்ட நிர்வாகிகள் இன்னும் 15 நாட்களுக்குள் அவற்றை நிறைவு செய்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து புகைப்படம் எடுத்து கட்சித் தலைமைக்கு…
மாம்பழ விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக மத்திய அரசிடம் சமபங்கு நஷ்டஈட்டு தொகை கேட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி கூறியுள்ளார். டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் சக்ரபாணி இன்று மத்திய வேளாண்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு.., தமிழ்நாட்டில் மாம்பழம் உற்பத்தில் கடந்த ஆண்ட விட 3 மடங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது, இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, எனவே விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வீழ்ச்சியை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு பாதி விலையை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டுள்ளளோம். மாம்பழ கூழ் மீது 12% ஜி.எஸ்.டி. உள்ளது அதனை 5 சதவிதமாக குறைக்க வலியுறுத்தியுள்ளோம். நெல்லுக்கான ஆதார விலையை அதிகரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். குறுவை பருவத்தில் நெல் கொள்முதலை 19 லட்சம் டன்னாக உயர்த்த கோரிக்கை வைத்தோம். பாசிப்பயிறு கொள்முதல் கால…
தமிழக அரசின் பட்ஜெட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியிருந்தது. இதன்படி 8 ஜிபி ரேம் (டிடிஆர்-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (எஸ்எஸ்டி), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது ஏஎம்டி பிராசசர், புளூடூத் 5.0, விண்டோஸ் 11 ஓஎஸ், 720பி ஹெச்டி கேமரா, ஒரு வருட உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களுடன் ‘தமிழக அரசு மடிக்கணினி’ என்ற வாசகமும் இதில் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெண்டர் வரும் ஜூலை 9ம் தேதி திறக்கப்பட…
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது. வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வு ரத்து, ஆண்டுக்கு 6% வரி உயர்வை கைவிடுதல், அபராத வரி விதிப்பதைத் தடுத்தல், சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை சீரமைத்து மனித உயிர்களை காத்தல், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 200 பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கும் கோவை மாநகராட்சிக்கும் எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நான்கு ஆண்டுகால மௌனமும் தற்போதைய போராட்டமும்: திமுக கூட்டணியில் இருந்த கடந்த நான்கு ஆண்டுகளாக, திமுக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஆதரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென நடைபெற்றுள்ள இந்த முற்றுகைப் போராட்டம் அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.…
வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது தொடர்பான கேள்விக்கு, யானைகள் – விலங்குகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது சகஜம் தான், உரிய இழப்பீடு தருகிறோம் என்ற அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு யானை முகாம்களை சேர்ந்த 4 யானை பாகன்களுக்கும் 11 பயிற்சியாளர்களுக்கும் தமிழக அரசு சார்பில் தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகள் பராமரிப்பு மையத்தில் சிறப்பு பயிற்சியளிக்கபட்டது. இந்நிலையில் பயிற்சி முடித்து திரும்பியவர்களை சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேரில் சந்தித்து வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர் உயிரியல் பூங்காவில் உள்ள தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய போராட்டங்கள் நடத்த தேவையில்லை என்றும், அனைவரையும் நிரந்தரம் செய்ய முடியாவிட்டாலும், அரசு நிதி நிலை மற்றும் பணியாளர் தேவையை பொறுத்து தேவையானவர்களை தகுதியின் அடிப்படையில் நிரந்தரம் செய்யபடுவார்கள் என்றும் தேர்தலுக்குள்…