Author: Editor TN Talks

நான் என்ன செத்தா போய்விட்டேன், எனக்கு எற்கு கூட்டுப் பிரார்த்தனை என்று சேலம் பாமக எம்எல்ஏ அருள் விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் அருள், இனி கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராகப் பணியாற்றுவார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நியமனம், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அருள், சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி…

Read More

அனுமதி இன்றி எடுத்த விடுப்புக்கு, நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றிய இளங்கோவன், 2006 முதல் 2008 வரை 117 நாட்கள் விடுப்பு எடுத்து சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏழு முறை பயணம் செய்ததாகவும், முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததுடன் ஒரு லட்சத்து 2916 ரூபாய் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இளங்கோவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மனுதாரர் இளங்கோவன் விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளதால், அதனை அனுமதியின்றி விடுப்பு எடுத்ததாக கருத முடியாது…

Read More

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பற்றி அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க சார்பாக வழக்கறிஞர் பால் கனகராஜ் மற்றும் வினோஜ் பி செல்வம் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால் கனகராஜ், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை இரண்டு முறை அருவறுக்க தக்க வகையில் ஆ.ராசா பேசியுள்ளார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். இவர்களின் நோக்கம் என்னவென்றால் கடந்த 22 ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு மிக பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடைபெற்றது. இதை திசை திருப்ப வேண்டுமென என்பதை நோக்கமாக வைத்து தான் இது போன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் சாணக்கிய தண்மை மிகுந்த ஒருவரை எப்படி இது போன்ற கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேச முடியும். இதற்கு ஆ.ராசா…

Read More

முருகன் மாநாட்டால் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை… எப்போதும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்தே பேச வேண்டுமா? எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது என பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் காட்டத்துடன் கூறினார். நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50 ஆண்டு நிறைவு நாளையொட்டி கோவை, பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலையில் பட்ட அனுபவங்களை மறந்து விட்டார். அதனால் தான் ஜனநாயகரீதியான எதிர்ப்புகளை கூட நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார். சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் அதற்கு உதாரணம். திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை போய்க் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ ? என்று எண்ணத் தோன்றுகிறது. தனது அரசின் தோல்விகளை…

Read More

இந்தியாவின் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, தற்போது பான் இந்தியா ஹீரோயினாக வலம்வந்து கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ’குபேரா’ படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக ’அனிமல், புஷ்பா 2’ ஆகிய படங்களிலும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அந்தப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியான ’குபேரா’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. கடந்த 20-ம் தேதி வெளியான ’குபேரா’ படம் இதுவரை ரூ.50கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜூனா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில்…

Read More

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை திமுக முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அடுத்த 45 நாட்களில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை நேரில் சந்தித்து, 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினராக்கும் முக்கிய முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்த வாக்காளர்களில் 30 சதவிகிதம் பேரை அணி திரட்டும் இந்த முயற்சி, தேர்தல் களத்தில் திமுகவின் வேகமான பயணத்தைக் குறிக்கிறது. மொபைல் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை – பயிற்சி முகாம்: “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை பணிகளை மொபைல் செயலி மூலம் நடத்த திமுகவினர் தயாராகி வருகின்றனர். இதற்காக, அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா ஆகியோர்…

Read More

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும், ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து 2022-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலத்தை அனுப்பின. அதன் மூலம் உலகில் முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை பெற்றது. அதனை தொடர்ந்து ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் கடந்த 10-ம் தேதி ஏவப்பட இருந்தது. தொழில்நுட்பம், வானிலை காரணம் என 6 முறை இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக, கடந்த 22-ந்தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என நாசா தெரிவித்தது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர் என்றும், இந்திய விண்வெளி…

Read More

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சிக்குள்ளே விரிசல் ஏற்பட்டுள்ளது. தனது உயிர்மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவர் என கூறிய ராமதாஸ், அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்தவர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி, புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடிக்கிறது. இந்த நிலையில், என்னுடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டும் தான் எம்.எல்.ஏ., சீட் எனவும், பா.ம.கவில் எனக்கே அதிகாரம் உள்ளது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கே வந்து இருக்கும் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தான் தேர்தலில் நிற்க போகிறவர்கள். இவர்களை தான் நான் தேர்ந்து எடுப்பேன். இவர்கள் தான் எதிர்கால சட்டசபை உறுப்பினர்கள். ஏனென்றால் எனக்கு எல்லா அதிகாரமும் உண்டு. அதனால் தான் நான் இந்த கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்று, நல்லவர்களை, வல்லவர்களை சட்டசபை உறுப்பினராக ஆக்குவேன் என்று இந்த நேரத்தில் உங்கள் மூலம்…

Read More

தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற குமரேசன் (32) என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை கூடலூர் குமுளி சாலையில் கூடலூர் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது, அவர் கையில் வைத்திருந்த சாக்குப் பையில் 5 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டனர். உடனடியாக காவல்துறையினர் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், கைதானவர் தேனி மாவட்டம் கம்பம் வடக்குப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் என்பதும், கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சாவைக் கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குமரேசன் மீது வழக்குப் பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கேரளப் பகுதியில்…

Read More

கேரளாவில் கடந்தாண்டு ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழையால், முண்டகை, சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தது. அத்தோடு 400-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். ஒட்டுமொத்த இந்தியாவையும் நிலைகுலைய வைத்த இந்த துயர சம்பவத்தில் இருந்து கடந்த ஒரு வருடமாக மக்கள் மீண்டு வந்து கொண்டு உள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரளாவில் மழை கோரத்தாண்டவம் ஆடுவதால், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு கேரளாவில் பருவமழை விரைவாகத் தொடங்கியது. அதன்படி புன்னம்புழா ஆற்றில் நீர்மட்டம் மழையால் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே இருந்த பெய்லி பாலம், கடந்தாண்டு நிலச்சரிவின் போது கட்டப்பட்டது. பாலத்தின் மறுபுறம் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், வயநாடு, முண்டகை பகுதியில் புதிய நிலச்சரிவு…

Read More