Close Menu
    What's Hot

    வடசென்னை 2-ல் தனுஷ்? வெற்றிமாறனின் திட்டம் என்ன?

    பணிப்பெண்கள் சிறைபிடிப்பா?. சிக்கிய நடிகர் ரவி மோகன்!. நீலாங்கரையில் பரபரப்பு!

    பெங்களூருவில் கொடூரம்!. மூத்த மகளின் ‘லிவ்-இன்’ காதலனால் பெற்றோர், தங்கை வெட்டிப் படுகொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு.
    அரசியல்

    தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு.

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி ராமதாஸ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    வேட்புமனு தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவைச் செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலர் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
    திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர். கடந்த 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் பத்மராஜன் உள்ளிட்ட 2 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.
    கடந்த 6-ம் தேதி திமுக வேட்பாளர்களான கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    அதேபோல, அதிமுக சார்பில் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். தருமபுரி மாவட்டம் பெண்ணாகரத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். தற்போது வரை 6 பதவியிடங்களுக்கு 17 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்றது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 12 ஆம் தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை என்றால், அவர்கள் மனுக்கள் நிராகரிக்கப்படும்.

    திமுக, அதிமுகவைச் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இன்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்தது.
    திமுக சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களும் இரண்டு வேட்பு மனுக்கள் அதிமுக சார்பில் இரண்டு பேர் இரண்டு மனுக்கள் மற்றும் 7 நபர்கள் சுயாட்சியாக 7 மனுக்கள் என்று மொத்தமாக 13 நபர்கள் 17 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை என்பதால் அவர்கள் மனுக்கள் நிராகரிக்கப்படும். திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜாதி பேதம் பேசும் ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் புகார் – கோவையில் பரபரப்பு!
    Next Article வாய்ப்பு இல்லாத ஆதங்கமா?” – வைரமுத்துவுக்கு சமூக வலைதள டிரோல்
    Editor TN Talks

    Related Posts

    வடசென்னை 2-ல் தனுஷ்? வெற்றிமாறனின் திட்டம் என்ன?

    June 23, 2026

    பணிப்பெண்கள் சிறைபிடிப்பா?. சிக்கிய நடிகர் ரவி மோகன்!. நீலாங்கரையில் பரபரப்பு!

    June 23, 2026

    பெங்களூருவில் கொடூரம்!. மூத்த மகளின் ‘லிவ்-இன்’ காதலனால் பெற்றோர், தங்கை வெட்டிப் படுகொலை!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வடசென்னை 2-ல் தனுஷ்? வெற்றிமாறனின் திட்டம் என்ன?

    பணிப்பெண்கள் சிறைபிடிப்பா?. சிக்கிய நடிகர் ரவி மோகன்!. நீலாங்கரையில் பரபரப்பு!

    பெங்களூருவில் கொடூரம்!. மூத்த மகளின் ‘லிவ்-இன்’ காதலனால் பெற்றோர், தங்கை வெட்டிப் படுகொலை!

    நடுரோட்டில் பயங்கரம்!. ஆம்னி பேருந்து மீது போதை கும்பல் வெறிச்செயல்! ஓட்டுநர்களுக்கு தர்மஅடி!

    பதவியை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன்..!! ஜனாதிபதி முர்மு ஏற்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.