Author: Editor TN Talks
சென்னையில் பச்சை மற்றும் நீல வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. நாள்தோறும் மெட்ரோ ரயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அடிக்கடி மெட்ரோ சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் காலை பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை சுமார் 22 கிலோ மீட்டர் வரை பபச்சை வழித்தடம் நீள்கிறது. கோயம்பேடு, அசோக் நகர் இடையே தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் நீல வழித்தடமான விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் எவ்வித தடங்களும் இல்லை. கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீரானதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 7.18 மணிக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 7.58 மணிக்கு சீராகி, ரயில்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. அலுவலக நேரம் தொடங்கும் முன்பு இந்த கோளாறு…
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’- உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கு 25-6-2025 புதன்கிழமை காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.முக. அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதுமுள்ள தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்கிறார்கள். இவர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக உள்ள சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கு ஜூன் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூலை 1ந் தேதி மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கிவைக்கப்படவுள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு, இந்த செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை என்ற பெயரிலான இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 20-ந் தேதி லீட்ஸ் நகரில் நடைபெற்றது. டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா தனது முதலாவது இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 5-வது சதமாகும். கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களும், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் 134 ரன்களும் குவித்தனர். கே.எல்.ராகுல் தன் பங்கிற்கு 42 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து…
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இடையே கடும் வாக்குவாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் முறையாக நியமிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நோக்கி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர் 45 வயதுக்கு மேல் ஆட்கள் போடக்கூடாது என நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் கரூரை பொறுத்தவரை கட்சியில் நிர்வாகிகள் இல்லாத நிலை உள்ளது குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் இல்லவே இல்லை என்ற நிலை இருக்கிறது. இதை சொல்வதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா நீ எல்லாம் என்ன நிர்வாகியா என உரிமையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி முறையாக பணியாற்ற முடியவில்லை என்றால் எழுதிக் கொடுத்துட்டு…
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க இருப்பது, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? மல்டி ஸ்பெஷாலிட்டி விளம்பரக் கட்டடமா? நோயாளிகளின் உயிருடன் விளையாடத் துடிக்கும் முதல்-அமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை நாளை (25.6.2025), முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஜூலை 1-ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். நீண்ட தூர பயணத்திற்கு கம்மியான செலவில் விரைவாக பயணம் மேற்கொள்ளலாம் என்பதால், பலரும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ரயில் கட்டணத்தை சிறிதளவு உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு, 500கி.மீ வரையிலான தொலைவுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இருக்காது. அதேநேரம் 500 கி.மீக்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும்.ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு கி.மீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது 500கி.மீ மேலான பயணத்தில் ஒரு கிமீக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும் உதாரணமாக 1,000 கி.மீ தூரப் பயணத்திற்கான…
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. முன்னதாக இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஜஸ்பிரித் பும்ரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா இதுவரை 34 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆகிய இந்திய…
கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் வெளிநாட்டவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலில், நடிகர் ஸ்ரீகாந்தும் அவர்களிடம் இருந்து போதைப் பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என வாதம் செய்துள்ளார். அவரது ரத்த மாதிரிகளை கொண்டு செய்த ஆய்வின் முடிவில் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. பிறகு அவரை கைது செய்த போலீசார், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குடும்பத்தில் பிரச்னை இருப்பதாகவும், தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பதாலும், தனக்கு ஜாமின் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார் ஸ்ரீகாந்த். குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்க முடியாது எனக் கூறிய நீதிபதி, அவரை ஜூலை 7-ம் தேதி…
”புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்… மது அருந்துதல் உடல் நலத்திற்குத் தீங்கு… போதைப் பொருள் பயன்படுத்துதல் உடல் நலத்திற்குக் கேடு மற்றும் சட்டவிரோதக் குற்றமாகும்” என்றெல்லாம் சொல்லிவிட்டுத்தான் படங்களைத் திரையிடுகிறார்கள். ஆனால், இதெல்லாம் ரசிகர்களுக்குச் சொல்வதற்கு மட்டும்தான் போல என நினைக்க வைக்கும் அளவு திரையுலகில் இரண்டறக் கலந்திருக்கிறது போதைப் பொருள் பழக்கம். திரைத்துறை என்றாலே போதைப் பழக்கம் ஒட்டிக் கொள்ளும் என்று பரவலான கூற்றைச் சில சம்பவங்கள் உறுதி செய்துவிடுகின்றன. வெற்றிக் கொண்டாட்டம், கேளிக்கை விருந்துகள், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் என திரைத்துறையின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மதுவும் புகையும் ஆறாய் ஓடுகிறது. ஆனால் போதைப் பொருள் பயன்படுத்திக் கையும் களவுமாகப் பிடிபடும்போதுதான், இவரெல்லாமா போதைப் பொருள் பயன்படுத்துவார் என்று நாம் ஆச்சர்யப்படும்படி ஆகிறது. அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டிருப்பதும் அப்படிப்பட்ட கேள்வியைத்தான் எழுப்புகிறது. இந்த நேரத்தில் இந்தியாவில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கும்…
கடைமடை பாசனத்திற்கு நீர் வரவில்லை என விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் 134 பாசன சபை உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 21 பாசன சபை உள்ளது. 250 கிராமங்களில் 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இந்த கிராமங்கள் அனைத்தும் கடை மடையாக உள்ளதால் திறந்து விடப்படும் தண்ணீர் அனைத்தும் வழியிலேயே திருடப்பட்டு தங்களுக்கு உரிய நீர் வந்து சேர்வதில்லை எனவும் உரிய முறையில் கடை மடைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் போராடி வரும் நிலையில் இன்று காங்கேயம் காளை ஆடு குதிரை என கால்நடைகள் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர் சகிதம் பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம்…