Author: Editor TN Talks

பயங்கரவாதம் தலைதூக்கும் போதெல்லாம் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கரகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.48,520 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பொதுக்கூட்ட மேடைக்கு வரும் பாதையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பீகார் மாநில வளர்ச்சிக்காக சுமார் ரூ.50,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பீகார் வந்த போது, பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு மீண்டும் பீகாருக்கு…

Read More

முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென்று தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூன் 15ம் தேதி 2025- 26ம் கல்வியாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. கணினி மூலமாக நடைபெறும் இந்தத் தேர்வுகள், காலை, பிற்பகல் என இரு கட்டங்களாக நடைபெறும் என்றும், இரு தேர்வுகளுக்கும் வெவ்வேறு வினாக்கள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், முதுநிலை நீட் தேர்வை 2 கட்டங்களாக நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவுக்கு தடை விதித்தது. மேலும், இந்த தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 2 கட்டமாக 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்துவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read More

எம்.பி. சீட் வழங்குவது தொடர்பான பிரச்சனை நீடித்து வந்த நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) சுதீஷ், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு சற்று நேரத்துக்கு முன்பு நடைபெற்றது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு எம்.பி. தொகுதிகள் ஒதுக்குவது குறித்து கூட்டணிக்குள் இழுபறி நீடித்து வந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக, கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் சுமுகமான முடிவு எட்டப்படாததால் இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சுதீஷ் நேரடியாக எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது, எம்.பி. சீட் விவகாரத்தில் ஒரு சுமூகமான முடிவை எட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Read More

கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இ-மெயில் மூலமோ அல்லது தொலைப்பேசி வாயிலாகவோ இந்த மிரட்டல் வரும். அதனை நம்பி அதிகாரிகளும் தேடுதல் பணியினை தொடருவர். பிறகு அது புரளி என்பது தெரியவரும். அப்படி நாடாளுமன்றத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் லாஞ்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சாம்ரைட். இவர் கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்திய தேசியக் கொடி, வெடிப் பொருட்கள் தொடர்பான சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் அரசியலமைப்பின் நகல், புகார் கடிதம் ஆகியவை இருந்துள்ளது. அந்த புகார் கடிதத்தில் தனது கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்த அவர், தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாடாளுமன்ற கட்டடத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை…

Read More

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில், மக்களின் வரிப்பணத்தில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சி தற்போது செயலிழந்து, துர்நாற்றம் வீசும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் ஆட்சியில் பொதுப்பணம் வீணடிக்கப்படுவதாக அதிமுக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. சிறுமலை – ஒரு சுற்றுலா சொர்க்கம்: கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி பகுதியான சிறுமலை, அதன் வானுயர்ந்த மரங்கள், குளுமையான காற்று, பசுமைப் போர்வையால் போர்த்தப்பட்ட வனங்கள் மற்றும் அரிய வகை வனவிலங்குகளுடன் (காட்டு மாடு, கேளையாடு, காட்டுப்பன்றி, மான், குரங்கு) தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. செயற்கை நீர்வீழ்ச்சியின் அவலம்: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், முன்னாள் மாவட்ட ஆட்சியர் விசாகன் காலத்தில், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சிறுமலை புதூர் செல்லும் சாலையில், மலைப்பகுதியில் இருந்து வரும் வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி பல லட்ச ரூபாய் செலவில்…

Read More

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கட்சி அலுவலக முகவரியை மாற்றியுள்ளார். சமீபத்தில் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி, கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும், பொதுக்குழுவைக் கூட்டி அவரை நீக்குவேன் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தார். இந்த உட்கட்சி மோதலுக்குப் பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், பா.ம.க. மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “கட்சியில் என்றும் அடிமட்டத் தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன். பா.ம.க. என்பது யாருடைய தனிச் சொத்தும் இல்லை; தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி” என்று குறிப்பிட்டார். மேலும், “எனக்கு நேற்றுதான்…

Read More

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக, கால்நடைத்துறை சார்பில் நடத்தப்பட்ட 24வது நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பிரையண்ட் பூங்காவில் கடந்த மே 24 ஆம் தேதி மலர் கண்காட்சியுடன் துவங்கிய கோடை விழா, இந்த வருடம் 9 நாட்கள் நடைபெறுவதாக சுற்றுலாத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. கோடை விழாவில் தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்று 7வது நாள் கோடை விழாவில், கால்நடைத்துறை சார்பாக 24வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், கோல்டன் ரிட்ரீவர், ஜெர்மன் செப்பர்டு, கிரேட் டேன், ராட்வீலர், டாபர்மேன், செயின்ட்பெர்னாட், ஹஸ்கி, ராஜபாளையம் உள்ளிட்ட 12 வகைகளைச் சேர்ந்த மொத்தம் 52 நாய்கள் கலந்துகொண்டன. இந்த நாய்கள் கண்காட்சி 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் நாய்களின் குணாதிசயங்கள், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைகளில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு, கால்நடைத்துறை சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும்…

Read More

தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து போடி செல்லும் அரசுப் பேருந்தில் துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த 4 பெண்கள் பயணம் செய்துள்ளனர். தங்களது நிறுத்தமான துரைராஜபுரம் காலனிக்கு வந்த போது பேருந்தை நிறுத்துமாறு நடத்துநரிடம் கூறிய போது, பேருந்து இங்கே நிற்காது என்று தெரிவித்துள்ளார். அடுத்த நிறுத்தமான B.மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தத்திலாவது பேருந்தை நிறுத்துங்கள் என்று பெண்கள் கூறிய போது, அங்கேயும் நிற்காது போடியில் மட்டும் தான் நிற்கும் என்று கூறியுள்ளார் நடத்துநர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் ஓட்டுநரிடம் சென்று பேருந்து நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர். நான்கு பெண்களும் கெஞ்சி கேட்டும் ”பேருந்து நிற்காது, நீங்கள் நிறுத்த சொன்னால் நாங்கள் நிறுத்த வேண்டுமா? உங்களுக்காகத்தானே அரசாங்கம் ஓசியில் பஸ் விட்டுள்ளது. அந்த பஸ்ஸில் ஏறி போக வேண்டியது தானே? எதற்காக எங்கள் உயிரை எடுக்கிறீர்கள் என்று? பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஏளனமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள்,…

Read More

சினிமா உலகில் ஒரு சில நடிகை, நடிகர்கள் பல படங்களில் நடித்திருப்பர். திடீரென ஒரு சில படங்களில் அவர்களது நடிப்பு மிகவும் கவனிக்கப்பட்டு இருக்கு. அப்படியான ஒரு நடிகை சுவாஸிகா. சமீபத்தில் வெளியான சூரியின் மாமன் படத்தில் ஒரிஜினல் ஹீரொயின் என்றால் அது சுவாஸிகா தான். அக்கா கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டிருப்பார். இதற்கு முன்னதாக அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோரது நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்தில், ஹீரோயினின் தாயாகவும் நடித்து வரவேற்பை பெற்றார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வரும் சுவாஸிகா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், லப்பர் பந்து படத்தை ஷாருக்கான் பார்த்ததும், இந்த படத்தை ரீமெக் செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும், அது தனக்கு பெருமையாக இருந்ததாகவும் கூறினார். அத்தோடு, சூர்யாவின் 45-வது படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் ஸ்பெஷல் எனவும், இதுவரை நடித்தது போல் இல்லாமல் ஒரு சிறப்பான…

Read More

கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பேரூர் செட்டிபாளையம், இந்திரா காலனிப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அடிப்படை வசதிகளின்மை: கழிப்பறை வசதி இல்லாததால் பெரும் அவதி: இந்திரா காலனியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு இதுவரை எந்தவித நிரந்தரக் கழிப்பறை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்திலும் கழிப்பறை வசதிகள் இல்லாதது, முதியோர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை உபாதைகளுக்குக்கூட வழியில்லாத நிலை உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள்: இதுகுறித்து அப்பகுதிப் பொதுமக்கள்…

Read More