Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில் கனமழை: சாக்கடை கலந்த வெள்ளத்தால் மூழ்கிய வீடுகள்!!
    தமிழ்நாடு

    கோவையில் கனமழை: சாக்கடை கலந்த வெள்ளத்தால் மூழ்கிய வீடுகள்!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025Updated:May 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பேரூர் செட்டிபாளையம், இந்திரா காலனிப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

    அடிப்படை வசதிகளின்மை: கழிப்பறை வசதி இல்லாததால் பெரும் அவதி:
    இந்திரா காலனியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு இதுவரை எந்தவித நிரந்தரக் கழிப்பறை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்திலும் கழிப்பறை வசதிகள் இல்லாதது, முதியோர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை உபாதைகளுக்குக்கூட வழியில்லாத நிலை உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள்:
    இதுகுறித்து அப்பகுதிப் பொதுமக்கள் கூறும்போது, “தற்போது சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். தொடர்ந்து மழை பெய்யும் காலம் என்பதால் வேலைகளுக்குச் செல்ல முடியாது. நாங்கள் தினக்கூலி செய்து பிழைப்பவர்கள். மழையினால் வீடுகளில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன. எங்களுக்கு உணவு, தங்கும் இடம் ஆகியவற்றை அரசாங்கம் ஏற்பாடு செய்து தர வேண்டும். மழை நிவாரண நிதி ஏதாவது கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

    https://tntalks.in/storage/2025/05/coimbatore.mp4

    மேலும், “தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் சலுகை கொடுப்பதாக செய்திகளிலும், நாளிதழ்களிலும் கூறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை. ரேஷன் பொருட்களுக்குக்கூட நாங்கள் வேலையை விட்டுவிட்டு ஒரு நாள் ரேகை வைக்கச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நிறைய திட்டங்கள் புதிதாக வருவதாகக் கூறுகிறார்கள், ஆனால் எங்களுக்கான திட்டங்கள் எதுவும் எங்களை வந்து சேருவதில்லை” என வேதனை தெரிவித்தனர்.

    இந்திரா காலனி மக்கள் மாவட்ட ஆட்சியர் தங்கள் பகுதிக்கு நேரில் வந்து சந்தித்து, தங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தர வேண்டும் என்றும், பொதுக் கழிப்பிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திரா காலனி மக்களின் அவல நிலைக்கு அரசு உடனடியாக செவிசாய்த்து, நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதிப் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

     

    Coimbatore Rain
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“குடிகார கணவரால் மகளின் படிப்பு வீணானது.. மது ஒழிய வேண்டும்” – விஜய்யிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்த தாய்!
    Next Article சூர்யா-45 அப்டேட் கொடுத்த நடிகை. .. லப்பர் பந்து ஹிந்தியில் ரீமேக்கா?..
    Editor TN Talks

    Related Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.