Close Menu
    What's Hot

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி போராட்டம்: தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜேபி 24 மணி நேர ‘கெடு’ – போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை!
    Featured

    டெல்லி போராட்டம்: தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜேபி 24 மணி நேர ‘கெடு’ – போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை!

    Editor web2By Editor web2July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CJP 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ 24 மணி நேரக் கெடு விதித்துள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

    டெல்லி அரசியலமைப்பு மன்றத்தில் (Constitution Club) மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அரசுப் பிரதிநிதிகளுடன் சிஜேபி குழுவினர் இன்று பிற்பகல் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் நலன் சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜே.பி. நட்டா, சிஜேபி கட்சியினரின் கோரிக்கைகள் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில்,பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஜந்தர் மந்தரில் பேசிய  கரப்பான் பூச்சி ஜனதா கட்சி  நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் பேச்சாளர் அசுதோஷ் ரான்கா, “வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 24 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். மத்திய அரசு தங்களது இந்தக் கோரிக்கையை ஏற்கத் தவறினால், தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டமானது நாடு முழுவதும் பரவி, முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்” என்று தெரிவித்தனர்.

    6 18

    மாணவர்களின் கோரிக்கைகளுக்காக 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் வேண்டுகோளை ஏற்றுத் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்துள்ளார். இருப்பினும், கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், நாடு தழுவிய அளவிலான போராட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் சிஜேபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, டெல்லியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    CJPProtest DelhiProtest DharmendraPradhan ResignDharmendraPradhan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்
    Next Article நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 5-வது நாளாக முடங்கிய அவைகள்!
    Editor web2
    • Website

    Related Posts

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    July 24, 2026

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    July 24, 2026

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் ‘தி ஒடிசி’: முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.