Author: Editor TN Talks
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி உள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 30 சதவித வாக்காளர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்ப்பது என்பது தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற முயற்சி. இதுபற்றி இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வது இலக்காக கொண்டு கட்சிப் பணிகளை துரிதப்படுத்த மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க உள்ளார். அதேபோன்று அதிமுக வலுவாக உள்ள மாவட்டங்களில் எத்தகைய முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து செய்தி விடுத்துள்ளனர். பிரதமர் மோடி “பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.” மு.க.ஸ்டாலின் தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள். இஸ்லாமிய மக்களுக்காக இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக – கல்வி – பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் ,…
இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் , தனது மகனை இறைவனுக்காக பலியிட முன் வந்த தியாகத்தை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆடு,மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து குர்பானி கொடுக்கும் நிகழ்வும் இன்று நடத்தப்படுகிறது. ஆடு,மாடு போன்றவற்றை பலியிட்டு அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழை, எளியவர்களுக்கும்,3-வது பங்கை தங்களுக்கும் என பகிர்ந்து , இறைச்சியினை உண்டு மகிழ்ந்து உற்சாகமாக பக்ரீத் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர். கோவை கோவையில் கரும்புக்கடை பகுதியில் இன்று காலைஇஸ்லாமிக் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையில் மஸ்ஜித் இஹ்ஷான் பள்ளிவாசல் தலைமை…
இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் விதமாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.71.840-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தையும், தமிழர்களையும் பிரித்து பார்க்க முடியாது. வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் தங்கத்தின் பயன்பாடு நம் வாழ்வில் இரண்டற கலந்துள்ளது. அதனை மிகமுக்கிய சேமிப்பாக பார்க்கும் மனோநிலையும் நம்மிடையே உண்டு. அதனால் தான் வேறெவரைக் காட்டிலும் தமிழர்கள் அதிக அளவு தங்கம் வாங்கி குவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்றுகாலை முதல் ஆறுதல் தரும் விதமாக சரிவை சந்தித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.73,040-க்கு விற்பனையாகி வந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,130-ஆக இருந்தது. இந்நிலையில் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.71.840-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு…
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க, சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான் வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அதில் வந்த பெண் பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது 3.155 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பயணி அவரது பையில் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் கோடிக் கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.…
நான் வைத்து இருக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இளைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருதான தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜாவிற்கு ரசிகர்கள் பூங்கொத்து, ஓவியங்கள் வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கூறும் போது : நான் பேச்சாளர் இல்லை. நான் ஒரு பட்டாளி. பட்டாளி என்றால் பாட்டு படுபவன். பட்டாளி என்பவன் வேலை செய்பவன். அவன் படும் பாடுகளால் அவன் பட்டாளியாக இருக்கிறான். அந்த பட்டாளிகளில் நானும் ஒருவன். என் பாடு என்பது வேறு. அவர்களது பாடு வேறு. என் பாடு தான் பாட்டுகளாக மாறுகிறது. கோவையில் என் காலடி படாத இடமே இல்லை. அப்போது இருந்த…
அமெரிக்காவில் அகங்காரம் vs பிடிவாதம்! நீடிக்கும் எலான் மஸ்க் – டொனால்ட் டிரம்ப் மோதலின் பின்னணி! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அகங்கார தலைவரும், பிடிவாத தொழிலதிபரும் நீயா நானா என மோதிக் கொள்ளும் போக்கு, அமெரிக்க அரசியலில் முக்கிய பேசுபொருள் ஆகியுள்ளது. அதன் பின்னணியை அறிந்துகொள்வோம். டிரம்ப்பும் மஸ்க்கும் அமெரிக்காவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் உலகப் பணக்காரர்களில் முதன்மை இடத்திலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் போட்டியிட நினைத்தார். ஆனால் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை இல்லாததால் தேர்தலில் பங்கேற்க முடியவில்லை. உடனே, தனக்கு சாதகமான டொனால்ட் டிரம்ப்பை ஆதரிக்கத் தொடங்கினார். ஒரு காலத்தில் தீவிர இடதுசாரியாக இருந்த மஸ்க், திடீரென வலதுசாரிக்கு ஆதரவானார். அக்டோபர் மாதம் 27-ம் தேதி நியூயார்க்கில் நடந்த மேடிசன் ஸ்கொயர் கார்டன் பேரணியில்…
ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவாகியுள்ள ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர்கான், சிறப்பு தோற்றத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதை ஆமிர்கான் உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜூன் 20-ஆம் தேதி வெளியாக உள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் பிரமோஷனில் கலந்துகொண்ட போது, “லோகேஷ் இயக்கும் ஒரு பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும்,” என்று கூறியுள்ளார். முன்பே, லோகேஷ் கனகராஜ், ‘இரும்பு கை மாயாவி’ என்ற சூப்பர் ஹீரோ கதையை உருவாக்கவிருக்கிறார், அதில் நடிகர் சூர்யா…
சூர்யா, வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தனு கூட்டணியில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் தனு பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “இந்தப் படத்துக்கான அனிமாட்ரானிக்ஸ் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன், படப்பிடிப்பு வேலைகளை தொடங்க உள்ளோம்.” சிறந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம், தமிழ்சினிமாவில் மைல்கல்லாக அமையும் என எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ⏳ சூர்யா × வெற்றிமாறன் × தனு – வெறித்தனமான பயணம் தொடங்கவிருக்கிறது!
கோவை அருகே கண்ணம்பாளையம் பகுதியில் வீடுகளில் உலரப் போடப்பட்டிருந்த உள்ளாடைகள் திருடப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் இந்த துணிகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கோவை கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் துவைத்து உலரப் போடப்பட்டிருந்த துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் வீடுகளுக்கு வந்து துணிகளைத் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்…