Author: Editor TN Talks

ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ஆடல், பாடல் நடைபெtuறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம், ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிர ம் . கொண்டு, அந்த கிராமத்தில்நீர் நிலைகளை தூர் வார வேண்டும்/நீதிபதி .உயர்நீதிமன்றம் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோவில் திருவிழா வை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி 7 க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள், கடந்த பல ஆண்டுகளாக ஆடல் பாடல் நிகழ்ச்சி திருவிழாவின் போது நடத்தப்பட்டு வருகிறது.சட்டம், ஒழுங்கு, பிரச்சினை உள்ளிட்ட காரணங்களை காட்டி அனுமதி மறுக்கின்றனர்.அனுமதி வழங்க வேண்டும் என கூறினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல்…

Read More

சபரிமலையில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டது சபரிமலை நடை!! சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு , கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மற்றும் மகர விளக்கு காலங்களை தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இது தவிர ஓணம்,சித்திரை விசு, வைகாசி விசாகம், நிறை புத்தரிசி திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தினங்களிலும் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்படும். அந்த வகையில் நாளை பிரசித்தி பெற்ற”பிரதிஷ்டா தின” சிறப்பு பூஜைகள் நடைபெறுவதை ஒட்டி இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது.சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு , கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல்…

Read More

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பை, பா.ம.க.விடம் வசூலிப்பது தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், சட்டப்படியும் நடத்தி, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தில், கடந்த 2013ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன. பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பா.ம.க.விடம் வசூலிப்பது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை, தமிழ்நாடு பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தை பின்பற்றி நடத்தப்படவில்லை எனக் கூறி, இதுசம்பந்தமாக இறுதி…

Read More

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி குறித்து தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற (DISHA) கூட்டத்தைக் – கண்டித்து பாஜகவினர் கருப்பு கொடியுடன் சாலை மறியல் போராட்டம் மத்திய அரசு திட்டங்களில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாகவும் அதனை முறையாக ஆய்வு செய்யாமல் கூட்டம் நடத்துவதாக குழுவின் தலைவரும் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு குழு தலைவரும் தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், மற்றும் மாவட்டத்தில் உள்ள துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடு குறித்தும்…

Read More

நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் சட்டப்படி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சங்க பொதுச் செயலாளர், நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் முடிவுகளின்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய…

Read More

சினிமாவிலும் அரசியலிலும் கன்னடமா தமிழா என்று சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் விளையாட்டில் பெங்களூருவின் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடுகிறது. 18 ஆண்டு கால வனவாசத்திற்குப் பின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் கோப்பையின் மூடி சூடியிருக்கிறது.  ஐபிஎல்-ன் பேன்சி அணிகள் ஐபிஎல் விளையாட்டைப் பொறுத்தளவில், மாநிலத்திற்கு ஒரு அணி இருந்தாலும் ரசிகர் படையால் கொண்டாடப்படும் பேன்சி அணிகள் ஐந்துதான். தோனிக்காக சென்னை, கோலிக்காக பெங்களூரு, சச்சினுக்காக மும்பை, ஷாருக் கானுக்காக கொல்கத்தா, கடைசியாக காவியா மாறனுக்காக ஐதராபாத் என ஐந்து அணிகளின் மீதே அனைத்து கவனமும். இதில், 5 முறை சென்னை, 5 முறை மும்பை, 3 முறை கொல்கத்தா, ஒரு முறை ஐதரபாத் என இவற்றைச் சுற்றியே கோப்பையும் சுழன்று கொண்டிருந்தது. இதில் 17 ஆண்டுகளாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்தது பெங்களூரு மட்டுமே.  ஆர்சிபி கடந்து வந்த பாதை 2008-ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வரும் ஆர்சிபி,…

Read More

பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு செய்ய கோரி வழக்கு…. இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு… விருதுநகர் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலின் திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு செய்ய கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த முத்துச்சாமி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். விருதுநகர் தேவதானம் பகுதியில் உள்ள , “ஸ்ரீ அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். இப்பகுதியில் சுமார் 1300 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் மண்டகப்படியில் சுவாமிக்கு மரியாதை செலுத்தப்படும். அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும், மண்டகப்படி அமைத்து சுவாமிக்கு…

Read More

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேல்மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆறு செல்கிறது. இந்த ஆற்றுப்படுகை மற்றும் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது. அதேபோல இங்கு உள்ள நீர்நிலைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. அதாவது, எந்தவித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக தனிநபர்கள் மணல் அள்ளி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்துக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இந்தநிலையை தவிர்க்க ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே எனது மனுவின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் அள்ளுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில்…

Read More

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம், நான்கு மணிநேரம் காத்திருந்த மக்கள் அதிகாரிகள் வராததால் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். கோவை வெள்ளலூர் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர், மற்றும் அதிகாரிகள் இன்று காலை 9 மணிமுதல் மக்களை சந்தித்து குறைகளை கேட்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி காலை 9 மணிமுதல் மதியம் ஒருமணி ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் விரக்தியுடன் திரும்பி சென்றனர். மேலும் இது மக்களை தேடி மக்களுக்கான திட்டமா? அல்லது மக்களை ஏமாற்றும் திட்டமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக அரசு மக்களை ஏமாற்ற புதிய, புதிய திட்டங்களுடன் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து நாடகங்களை அரங்கேற்ற துவங்கியுள்ளது தற்பொழுது வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.

Read More

தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் கொடிக்கும் எந்த வித ஒற்றுமையும் இல்லை எனவும் பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென தவெக சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More