Author: Editor TN Talks

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை நேரில் அழைத்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசு வழங்கி பாராட்டி வருகிறார். முதல்கட்டமாக கடந்த 30-ந் தேதி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அழைத்து பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு மதிய உணவு விருந்தளித்து பாராட்டினார். இதன் இரண்டாம் கட்ட விருது விழா, நாளை (4/6/25) அன்று மாமல்லபுரத்தில் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தருமபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, விருதுநகர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 75 சட்டமன்ற தொகுதிகளில் படித்து முதலிடம் பிடித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இதேபோன்று புதுச்சேரி மாநிலத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறப்பு செய்யப்பட உள்ளனர். பெற்றோர்கள்…

Read More

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ள, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, “மனுதாரர் ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது” என குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில், “சாட்சியங்களை கலைக்க மாட்டேன். அதற்கு வாய்ப்பும் இல்லை. வழக்கு தொடர்பாக விபரத்தை சேகரிக்க 3 மாதங்கள் ஜாமின்…

Read More

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடும் விதித்தும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த விதிகளை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. அந்த…

Read More

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு குறித்து புதிய துணை கண்காணிப்பு குழுவினர் முதல் முறையாக இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேனி, மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர் வளத்துறை கமிஷன் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு மற்றும் துணை கண்காணிப்பு குழு ஆகிய…

Read More

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு தேயிலைத் தோட்டபகுதிகளில் மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதியில் உலா வரும் படையப்பா யானை.. கடந்த இரண்டு மூன்று தினங்களாக மூணாறு அருகில் உள்ள மாட்டுப்பட்டி, குண்டலை, செண்டு வாரை, அருவி காடு தேயிலைத் தோட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் படையப்பா ஒற்றை யானையைகண்டு தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் பொதுமக்கள் அச்சம். அரிக்கொம்பன் யானைக்குப் பிறகு கேரளா இடுக்கி மாவட்டத்தின் செல்லப் பிள்ளையாக கருதப்பட்டாலும்,ஒற்றையாக சுற்றித் திரியும் யானையை கண்டு தேயிலை தோட்டத் தொழிலாளிகள் குடியிருப்பு வாசிகள் கலக்கம். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சுற்றுப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளில் மீண்டும் கேரள இடுக்கி மாவட்டத்தின் செல்லப்பிள்ளையாக கருதப்படும் படையப்பா யானையின் நடமாட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாட்டுப்பட்டி அணை மற்றும் அருவிக்காடு பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து கொண்டிருந்த படையப்பா யானை தற்போது பகல் நேரங்களிலும் குண்டலை,செண்டுவாரை போன்ற பகுதியில்…

Read More

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று மிகுந்த ஆனந்தமாக முடிந்தது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார், இசையை அனிருத் அமைத்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதனுடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு, இனி முழுமையாக அரசியலில் ஈடுபட இருப்பதாக தளபதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரசிகர்கள் மனதில் நெகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இந்த முடிவால், தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. தளபதி விஜய் முழு நேர அரசியல் பயணத்தை இன்று முதல் தொடங்குகிறார் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு உணர்ச்சிபூர்வ தருணமாகும்.

Read More

ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பயணம் செய்வார். வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம். ஜூன் மாதம் கிரகங்கள் கும்ப ராசியில் இருந்து வரிசையாக பயணம் செய்கின்றன. ராகு கும்ப ராசியிலும் சனி மீன ராசியிலும் மேஷத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் சூரியன், மிதுனத்தில் புதன், குரு சிம்மத்தில் கேது, செவ்வாய் என கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பயணம் சாதகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் செயல்கள் நீங்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம்…

Read More

மறைந்த முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி விடுத்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு.. தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்! ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!

Read More

நகர்புற உள்ளாட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை ஒரு மாநகராட்சி மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, நகர் மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, பேரூராட்சிக்கு ஒரு மாற்றுத்திறனாளி என ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக வைத்து குழு அமைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், ஊரக உள்ளாட்சிகளை பொறுத்தவரை கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக நியமிக்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நகர்புற உள்ளாட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்காலம் முடியும் வகையில் இவர்கள் பதவியில் இருப்பார்கள் என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் இந்த சட்ட…

Read More

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று, செம்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அரசும் திமுகவும் அதன் கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளன. ஒரு தமிழறிஞராகவும், படைப்பாளராகவும், இதழாசிரியராகவும்  கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் அதிகம். ஆனால், அவரது பிறந்த நாளைச் செம்மொழி நாள் என்று திமுக அரசு அறிவித்த காரணம் என்ன? செம்மொழி வரலாற்றின் செப்பேடுகளில் கருணாநிதி மட்டுமா பங்களித்தார்? மொழி எப்போது செம்மொழி ஆகிறது?  ஒரு மொழி நீண்ட வரலாற்றையும், இலக்கியச் செறிவும் கலைப்படைப்புகளில் வளமும் கொண்டிருக்கும்போது அதைச் செம்மொழி என்று அறிவிக்கிறார்கள். உலகில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்ட 21 மொழிகளில் 11 மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளன. இதனால் செம்மொழித் தகுதி என்பது பொதுவாகவே வழக்கொழிந்த மொழிகளுக்குக் கொடுக்கப்பட்ட இறுதி உயர் மரியாதையாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதும் புழக்கத்தில் உள்ள தமிழ் மொழி, 3000 ஆண்டு கால வரலாற்றையும் செழுமையான இலக்கியத் தரவுகளும், கலைப் படைப்புகளையும் கொண்டிருக்கிறது. இதுவே செம்மொழிகளின் பட்டியலில்…

Read More