Author: Editor TN Talks

பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல விழாவில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டு காலமாக பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு கருத்துக்களை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி கடந்த 3 ஆண்டு காலமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்” என குற்றம்சாட்டினார். ”3 ஆண்டு காலம் புறக்கணித்த பிறகு, நேற்று(24.05.2025) இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கருத்தை பதிவு…

Read More

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84) மே 24, சனிக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை காஜி திரு.சலாவுதீன் முகமது அயூப் சாகிப் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறினார். அவர் தனது இரங்கல் செய்தியில், “கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூக சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இஃப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய…

Read More

சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(45). இவர் கடந்த 13 ஆண்டுகளாக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி வாசுகி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று(25.05.025) காலை மதுரை மாநகர் கோமதிபுரம் மல்லிகை மேற்குதெருவில் மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பழுது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் அதனை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருநதுள்ளார். அப்போது திடிரென டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் தலைப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மதுரையில் கடந்த 3 நாட்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியின் போது உயிரிழந்து வரும் நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்…

Read More

திண்டுக்கலில் கச்சேரி தெரு மேற்கு தாலுகா அலுவலகம் அருகே திண்டுக்கல் மாவட்ட சிறை உள்ளது. இங்கு மதுரை, சுப்ரமணியபுரம் காவல் நிலைய போலீசார் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபரை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது, நேற்று(25.05.2025) சனிக்கிழமை இரவு மாவட்ட சிறை சாலை வாசலில், போலீசார் கவனக்குறைவாக இருப்பதை அறிந்து கொண்ட குற்றவாளி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடியுள்ளார். அங்கிருந்து சென்று மாவட்ட சிறை பின்பு உள்ள சின்ன ஐயங்குளம் பகுதியில் இருட்டில் ஒளிந்து கொண்டான். உடனடியாக மதுரை சேர்ந்த போலீசார் அய்யன்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் கைதியை விரட்டி சென்று பிடித்து கொடுத்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதியை அடைத்தனர்.

Read More

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊர் திருப்பதி அருகே உள்ள நாராவாரி பள்ளி கிராமம். நாராவாரி பள்ளி சந்திரகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமமாகும். ஆனால் சந்திரபாபு நாயுடு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் தொகுதியில் இருந்து ஆந்திர சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராகவும் மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் குப்பம் தொகுதியில் ஒரு சொந்த வீடு கூட இல்லாத சந்திரபாபு நாயுடு இந்த தொகுதிக்கு சொந்தக்காரர் கிடையாது என்று எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது. எனவே அங்கு சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்று முடிவு செய்த சந்திரபாபு நாயுடு கடந்த 5 ஆண்டுகளாக அதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அவரால் அங்கு வீடு கட்ட…

Read More

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் இப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு ஊரிலும் மாநாடுகள் நடத்தி வாக்கு சேகரிப்பதுடன், நிர்வாகிகளுடன் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர் கட்சி தலைமையினர். அந்த வகையில், கிறிஸ்துவ வன்னியர்கள் நடத்தும் மாநில மாநாடு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் மேட்டுப்பட்டியில் நடைபெற்றது. எம்.பி.சி உரிமியை கிறிஸ்துவ வன்னியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில், திண்டுக்கல், மதுரை, கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வன்னியர்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர். இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத்தந்தை ஜோசப் ராஜ் பேசுகையில், ”கடந்த 2021 தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரச்சாரத்திற்காக வந்திருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றால் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்.பி.சி பட்டியல்…

Read More

திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்த புருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சுமார் 18.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தல் முறியடிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் புருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில், வெள்ளிக்கிழமை (மே 23, 2025) மேற்கு வங்காள மாநிலம் புருலியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, இன்று (மே 25, 2025) அதிகாலை 1:30 மணியளவில் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது. திண்டுக்கல் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமிக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த ரயிலில் கஞ்சா, குட்கா மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாகத் தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் ரயிலில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் போது, ரயிலின் S3 கோச் மற்றும் முன்பதிவில்லா…

Read More

உசிலம்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்தது எப்படி? மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றுவிட்டு, தங்கள் சொந்த ஊரான குஞ்சாம்பட்டிக்கு அரசு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். குஞ்சாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர்கள் சாலையைக் கடக்க முயன்றபோது, தேனியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு இந்த விபத்தில் ஒரு வயது பச்சிளம் குழந்தையான பிரகலாதன்,…

Read More

கோவையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கூட்செட் சாலையில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். அமைச்சர் முத்துசாமி பேட்டி: ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: “வானிலை ஆய்வு மையத்தின் கடுமையான மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் அவர்கள் உடனடியாக முன்னேற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு, தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு நிரந்தரத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி…

Read More

உருளைக்கிழங்குன்னா சின்னக் குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். பொரியலா செஞ்சாலும் சரி, குழம்புல போட்டாலும் சரி, ஒரு புடி புடிச்சிருவாங்க. சிக்கனை வெச்சு விதவிதமா சமைக்கிற மாதிரி, உருளைக்கிழங்கையும் பல ஸ்டைல்ல பண்ணலாம். அப்படி ஒரு புதுமையான உருளைக்கிழங்கு ரெசிபிதான் “ஆலு கே குட்கே”. ஆலு கே குட்கேன்னா என்னன்னு யோசிக்கிறீங்களா? இது வேற ஒண்ணுமில்லீங்க, நம்ம ஊர்ல செய்யுற உருளைக்கிழங்கு வறுவல் மாதிரிதான். ஆனா, உத்தரகாண்ட் மக்கள் சேர்க்குற ஸ்பெஷல் மசாலாவோட செஞ்சா, இது வேற லெவல்ல இருக்கும். இந்த வித்தியாசமான உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 4 கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிய துண்டு (2 இன்ச்) கொத்தமல்லி இலை – சிறிதளவு (தண்டு பகுதியுடன்) கரம் மசாலா -…

Read More