Close Menu
    What's Hot

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விஜய்க்கு ஆதரவாக பேசிய பங்கு தந்தை… வன்னியர்கள் மாநாட்டில் நடந்த சம்பவம்…
    Featured

    விஜய்க்கு ஆதரவாக பேசிய பங்கு தந்தை… வன்னியர்கள் மாநாட்டில் நடந்த சம்பவம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025Updated:May 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் இப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு ஊரிலும் மாநாடுகள் நடத்தி வாக்கு சேகரிப்பதுடன், நிர்வாகிகளுடன் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர் கட்சி தலைமையினர்.

    அந்த வகையில், கிறிஸ்துவ வன்னியர்கள் நடத்தும் மாநில மாநாடு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் மேட்டுப்பட்டியில் நடைபெற்றது. எம்.பி.சி உரிமியை கிறிஸ்துவ வன்னியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில், திண்டுக்கல், மதுரை, கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வன்னியர்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    1 4

    இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத்தந்தை ஜோசப் ராஜ் பேசுகையில், ”கடந்த 2021 தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரச்சாரத்திற்காக வந்திருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றால் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்.பி.சி பட்டியல் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார், ஆனால் தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வாக்குறுதியை மறந்து விட்டு நீங்கள் கிறிஸ்தவர்கள் என பிரித்துப் பார்க்கிறார்” என குற்றம்சாட்டினார்.

    ”கிறிஸ்தவ வன்னியர்களின் வாக்கு மட்டும் இனிக்குது, சலுகை கேட்டால் கசக்குதா? உனக்கு நான் வரி கட்டுகிறேன், உனக்கு நான் வேர்வை சிந்துகிறேன், என்னுடைய ஈரக் கொலையை பிடித்து வாட்டுகிறாய், அனைத்தையும் பெற்றுக்கொண்டு எனது உரிமையை மட்டும் கேட்டால் நீங்கள் கிறிஸ்தவர்கள் எனக் கூறி நடந்து கொள்கிறாயே இது சரியா ? நீ ஒன்றும் எங்களுக்கு பிச்சை போட தேவையில்லை” என சாடினார்.

    2 4

    ”போன முறை கூட்டணியில் நாங்கள் ஓட்டு போட்டதால் தான் நீங்கள் ஜெயித்தீர்கள். பிஜேபி அதிமுக ஒரு புறம் இருக்க திமுக கூட்டணி ஒருபுறம் இருக்க நடுவில் ஜோசப் விஜய் என்று கிறிஸ்தவர் ஒருவர் வருகிறார் புரிந்து கொள்ளுங்கள்” என கூறினார். 5,000 கிறிஸ்துவ வன்னியர்கள் கூடியிருந்த மாநாட்டில் பாமகவுக்கு ஆதரவாக பேசாமல், விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பங்குதந்தை பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் 18.4 கிலோ கஞ்சா பறிமுதல்!
    Next Article சொந்த தொகுதியில் வீடு… குடிபுகுந்தார் சந்திரபாபு நாயுடு…
    Editor TN Talks

    Related Posts

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    June 17, 2026

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    June 17, 2026

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    ‘டெலிகிராம்’ தடை மோடி அரசின் புதிய தந்திரமா? ராகுல் காந்தி கடும் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.