Author: Editor TN Talks
தூத்துக்குடியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா வெள்ளாளன்விளை கிராமத்தில் உள்ள துாய பரிசுத்த கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். மோசஸ் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். சாத்தான்குளம் தாலுகா மீரான்குளம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் கவிழ்ந்தது. சுமார் 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் முழுமையாக இருந்ததால் வேனுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இருப்பினும், வேனுக்குள் இருந்த ஷேனி கிருபாகரன், ஜெஸிட்டா எஸ்தர், ஹெர்சோம் ஆகியோர் காரில் இருந்து வெளியே வந்து கிணற்றுக்குள் தவித்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காருக்குள் சிக்கிய மோசஸ், அவரது மனைவி…
நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை வைத்து விளம்பரம் செய்து போலி கிரிப்டோ கரன்ஸி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் இருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது நிறுவனத்தின் பங்கு இயகுநர் ஒருவரை சைபர் க்ரைம் போலீசார் கோவையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்த பின்னர், நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (66). ராணுவ வீரரான அவர் ஓய்வு பெற்ற பின் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். இவர் தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரண்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். அதன் படி கடந்த 2022 ஆம் ஆண்டு இணையத்தில் அஷ்பே என்கிற கிரிப்டோ கரன்சியில் முதலீடு…
இந்தியா சார்பில் ஐநா சபையில் பங்கேற்க அனுப்பப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் நடக்கும் ஐநா கூட்டத்தில், இந்தக் குழுவினர் பங்கேற்று, ஆபரேஷன் சிந்துர் குறித்து விளக்க உள்ளனர். இந்த நிலையில் வெளியாகி இருக்கும் பெயர் பட்டியல், பாஜகவின் அரசியல் உத்தியோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. தலைவர்களின் எகோபித்த மரியாதை: பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர், நாட்டின் அரசியல் தலைவர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கட்சித் தலைவர்கள் பேதமின்றி இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் அத்துமீறலுக்கும், பதிலடி புரிந்து கொள்ளாமல் தாக்கி போர் சூழலை ஏற்படுத்திய பாகிஸ்தானின் அட்டூழியத்திற்கும் அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். ஆப்ரேஷன் சிந்தூர், பாகிஸ்தானை மிரள வைத்ததோ இல்லையோ, பாஜகவின் செயல்பாட்டால் தலைவர்களை ஒரே அணியில் திரள வைத்தது. ஏன்? எப்படி? ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்து இருப்பதாக இந்தியா புல்லரித்துக்…
கோவைப்புதூர் பகுதியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்முக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. தென் தமிழக அளவில் நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து தென் பாரத மக்கள் தொடர்பு துறை செயலாளர் பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். அத்தோடு தென் தமிழக தென் தமிழக மாநில தலைவர் ஆடலரசன் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். கோவை கோட்ட செயலாளர் அஜய்கோஷ் தலைமையில் நடந்த இம்முகாமில், 900 பேர் இணைந்து பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவில், பயிற்சி முகாமில் பங்கேற்ற ஸ்வயம் சேவர்கள் கற்றுக் கொண்ட காராத்தே, சிலம்பம், யோகா, சமத்தான், விளையாட்டு, கோஷ் வாத்திய இசை போன்றவற்றை நிகழ்த்தி காட்டினர். முகாமினை மத்திய…
ஐபிஎல் தொடரைப் போன்றே ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ப்ரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் இடம்பெறும் இத்தொடரில் ஐபிஎல்-ஐ போன்றே வீரர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். இதுவரை 11 தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. பாட்னா அணி அதிகபட்சமாக 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கடந்தாண்டும் பாட்னா இறுதி போட்டியில் ஹரியானா அணியுடன் மோதியது. போட்டி முடிவில் ஹரியானா அணி பாட்னாவை வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 12-வது ப்ரோ கபடி லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வரும் 31 மற்றும் ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக 8 வீரர்கள் தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தமாகினர். தமிழ் தலைவாஸ் அணி ரூ.2.15கோடிக்கு சச்சின் தன்வரை வாங்கியது. இதுபோல் இம்முறை நிறைய வீரர்கள் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி அணிகள்…
’நாயகன்’ படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் ’தக் லைஃப்’. சிம்பு, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ’ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’, ’மெட்ராஸ் டாக்கீஸ்’, ’ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் ஜூன் 5-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ’தக் லைஃப்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் 8 லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் என கொடுத்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ’ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், அதன் இரண்டாம் பாகமும் எடுக்கப்படவுள்ளது. தற்போது அவரிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக இருப்பது ’கூலி’ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிறவைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’ஜெயிலர் படத்தின் இரண்டாம்’ பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ’சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற திரைப்படம் வெளியானது. நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூரியா உட்பட பலர் நடிப்பில் வெளியா இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் ரூ.100கோடியை தாண்டியது. இப்படத்தின்…
மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு- தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது. ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 2.45 மணிக்கு துவங்கிய கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக் கூறி, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அக்ஷயா உள்ளிட்ட 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், மின் தடை காரணமாக குறைவான வெளிச்சத்தில்…
ருமேனியாவில் நடைபெற்ற ‘சூப்பர்பெட் கிளாசிக் செஸ்’ தொடரில் இந்தியாவின் ‘பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம்’ வென்று அசத்தி உள்ளார். செஸ் உலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் பிரக்ஞானந்தா. புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் டி.குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடினார். அதேப் போல மற்ற வீரர்களான அலிரேசா பிருஸ்ஜா, மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் எடுத்து இருந்ததால், வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் மாக்சிம் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு கோப்பையுடன் ரூ.65 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. இந்த தொடரில் டி.குகேஷ் 6வது இடம்பிடித்தார். சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்துகளை…
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், பொருளாதார குற்றப் பிரிவுக்கு எதிராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம், 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் உள்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் இந்த மோசடியில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, ஆர்.கே.சுரேஷின் எட்டு வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டனர். வங்கிக் கணக்குகள் முடக்கத்தை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வழக்கு எண்ணின்…