Author: Editor TN Talks

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தமிழில் ’கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியவர், ’அழகிய அசுரா’என்ற படத்தில் கதாநாயகியாக உருவெடுத்தார். ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் ரெஜினா கசாண்ட்ரா. சமீபத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விடா முயற்சி’ படத்தில் வில்லியாக நடித்து அசர வைத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் தாண்டி பாலிவுட்டில் சன்னி தியோலுடன் ’ஜாத்’, அக்‌ஷய் குமார் அனன்யா பாண்டேவின் ‘கேசரி2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் சுந்தர்.சி. இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்2-ம் பாகத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.…

Read More

வன்னிய சங்க தலைவராக இருந்த ஜெ.குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில், இயக்குநர் கெளதமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.குருவின் மனைவி கல்யாணி, மகள் விருதாம்பிகை ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வன்னியர் சங்க தலைவராகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தங்கள் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தாகவும் ஆனால் பாமக நிறுவனர் இராமதாஸ்க்கு மிக நெருக்கமான இயக்குநர் கெளதமன், படையாண்ட மாவீரா என்ற பெயரில் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படத்தை தங்கள் அனுமதி பெறாமல் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டு வரும் மே 23 ம் தேதி திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளதாகவும், ஜெ. குருவின் குடும்பத்தினர் அனுமதி பெறாமல் எடுக்கப்பட்டுள்ள படையாண்ட மாவீரா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க…

Read More

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்று (மே13) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பி.ஆர். கவாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மத்திய அமைச்சர் ஜெ.பி.நாட்டா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில்…

Read More

சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக இன்று (மே 14) மாலை திறக்கப்படுகிறது. கேரளாவின் புகழ்ப்பெற்ற வழிபாட்டுத் தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உட்பட நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுண்டு. இந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. இன்று (மே 14) முதல் 5 நாட்களுக்கு கோயில் நடை திறந்திருக்கும். கோவில் தந்திரிகள் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையைத் திறக்கவுள்ளார். அப்போது சிறப்பு தீபாராதனை மற்றும் பதினெட்டாம் படியின் கீழ்ப் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்பனுக்கு நாளை…

Read More

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் உரிய தண்டனை வழங்கப்பட்டது போல் விரைவில் கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போதே பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பேசினேன். இப்போது நான் சொன்னது போலவே தீர்ப்பு வந்திருக்கிறது” என்று கூறினார். மேலும் “இதே போல் கோடநாடு வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய தண்டனை விரைவில் வழங்கப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி எதற்காகச் சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால் தான் சொல்லித்தான் 100 நாள் வேலைத் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்று கூறி வருகிறார். இப்படி பொய் சொல்லி பித்தலாட்டம் செய்வதுதான்…

Read More

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் இருநாடுகளுக்கும் மாறி மாறி தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது. அதேப் போல விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கடந்த 9-ம் தேதி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலானது கடந்த சனிக்கிழமை (10.05.2015) நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் வரும் 17-ம் தேதி ஐபிஎல் போட்டியை தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மே 24-ம் தேதி ஜெயப்பூரில் நடைபெற இருப்பதாகவும், நிறுத்தப்பட்ட ஓவர்களில் இருந்து போட்டி தொடரும் எனக் கூறப்படுகிறது. பிளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் 17 போட்டிகள் நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் சுற்றின் படி குவாலிபையர் 1 – மே 29-ம் தேதியும், எலிமினேட்டர்…

Read More

வரும் 16 ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, நிர்வாகிகள் நியமனம் தொகுதியின் நிலைப்பாடு உள்ளிட்டவைகள் குறித்து 15 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து வருகின்ற 16ஆம் தேதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read More

ஊட்டியில் நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 127 வது மலர் கண்காட்சியை திறந்து வைக்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மலர்கண்காட்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் தற்போது வெயில் கடுமையாக சுட்டெரிப்பதாலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நாளை தொடங்கி, 25 ஆம் தேதி வரையிலும் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக ஊட்டி பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நிலையில் நாளை மலர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட இருக்கிறார்.

Read More

சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து மாமியாரின் ஜி.பே மூலம் பணம் பெற்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்த சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சில நேரம் சிறை அதிகாரிகள் இவர்களுக்கு தேவையான போதைப் பொருட்கள் உட்பட சில பொருட்களை கைதிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சப்ளை செய்வதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகும். சிறையில் உள்ள கைதிகள் மூலம் மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட திண்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப் போல, சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து அந்த திண்பண்டங்கள் மக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு திண்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியை சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இவ்வாறு விற்பனை…

Read More

’லவ் டுடே, டிராகன்’ பட ஹிட்டைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் அவர் நடிக்கும் படங்கள் 2கே கிட்ஸ்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பிரதீப் வளர்ந்து வருகிறார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காதல் இன்சூரன்ஸ் கம்பெனி” மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ”டியூட்” போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ’டியூட்’ படத்தில் பிரதீப் நடித்து வருகிறார். மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான், டியூட் தலைப்பு தன்னுடையது என நடிகரும், இயக்குநருமான தேஜ் கூறியிருப்பது…

Read More