Author: Editor TN Talks

அடர்ந்த காடுகளில் உள்ள விலங்குகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தூண்டும். இதனால் அரிய உயிரினங்களை கடத்தி கள்ளச்சந்தையில் கோடிக்கணக்கான மதிப்பில் விற்க வழிவகுக்கிறது. இதே போல், பீகாரில் உள்ள வால்மீகி புலிகள் சரணாலயம் மற்றும் பல மாநிலங்களில் காணப்படும் விஷமற்ற ரெட் சாண்டு போவா பாம்பும் உள்ளது. “இரண்டு தலை பாம்பு” என்று அறியப்படும் இந்த பாம்புக்கு நீண்ட காலமாக பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள், இதனை சட்டவிரோதமாக கடத்தும் போக்கை அதிகரித்துள்ளன. ரெட் சாண்டு போவாவுக்கு உண்மையில் இரண்டு தலைகள் இல்லை. அதன் வால் பாம்பின் தலையை ஒத்திருப்பதால் வேட்டையாடுபவர்களை குழப்பி தாக்குதல்களைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு சங்கத்தின் திட்ட மேலாளரும் வனவிலங்கு நிபுணருமான அபிஷேக், “டபுள் எஞ்சின் பாம்புகள்” என்று அறியப்படும் இவை முற்றிலும் பாதிப்பில்லாதவை என்றும், அவை அடக்கமானவையாய் தொந்தரவு…

Read More

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்… தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது…. இனி எந்தவொரு பயங்கரவாத செயலும் போராகவே கருதப்படும்… அணு ஆயுத மிரட்டலைக் கண்டு இந்தியா ஒருபோதும் அஞ்சாது… இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளநிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதன் விரிவான தகவல்களை பார்ப்போம்.. போரில் ஈடுபட்ட இந்தியாவின் முப்படைகளுக்கும், உளவுத்துறை அமைப்புகளுக்கும் ஒரு சல்யூட் என்று மோடி குறிப்பிட்டார். பாதுகாப்பு படையினரின் பராக்கிரம், துணிச்சல் நமக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது என்றார். ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதல் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார். பஹல்காமில் மகள்கள்…

Read More

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே லைசன்ஸ் பெற்று இருசக்கர வாகனங்களை இயக்க முடியும் என போக்குவரத்து சட்டம் சொல்கிறது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னை பூந்தமல்லி சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று சிறுவர்கள் விபத்தில் சிக்கியதில், 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது 13-வயது மகன் பிரியன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கலைவாணன் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. தந்தை இல்லாத நேரத்தில் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற பிரியன், தனது நண்பர்களான 10வயது சிறுவர்கள் கார்த்திகேயன் மற்றும் முகிலன் ஆகியோருடன் சுற்றியுள்ளார்.…

Read More

சாதியை காரணம் காட்டி, கோவில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம் என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெரியபுராணம் எழுதிய சேக்கிழார், குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம், மே 13ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் விழாவுக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதாகவும், மற்ற சமுதாயத்தினரிடம் நன்கொடைகள் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறி, குன்றத்தூரைச் சேர்ந்த அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க தலைவர் இல.பாண்டியராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, தீண்டாமை இந்நாட்டில் பல்வேறு வழிகளில் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் சாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம் என வேதனை தெரிவித்துள்ளார். கடவுள் முன் ஜாதி இருக்கக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைத் சுட்டிக் காட்டிய நீதிபதி,…

Read More

பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விசேஷ வாகனங்கள் சுவாமி மற்றும் அம்மாள் எழுந்தருளி மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 8ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 9ம் தேதி திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், புகழ்பெற்ற மதுரை அழகர்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 10ம் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து தங்கப்பல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் அமைக்கப்பட்டுள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11ம் தேதி இரவு தல்லாகுளத்தில் விடியவிடிய நடைபெறும் எதிர்சேவையில் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி…

Read More

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற நாளை (மே 13ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர்எழுதினர். கடந்த 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 95.03 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இந்தநிலையில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற நாளை (மே 13ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை (மே 13) முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

Read More

வரும் 18ம் தேதி வரை தமிழகத்தின் ஒரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை துவங்கும் என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை யைமம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Read More

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து வருவதன் எதிரொலியாக, அண்மைக்காலமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறையத் தொடங்கி உள்ளது. இந்தநிலையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மட்டும் இரண்டு முறை சரிவு காணப்பட்டது. காலையில் ஒரு சவரன் ரூ.1,320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.8,880 ஆக இருந்தது. மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, ரூ.1,040 குறைந்து, சவரன் ரூ.70,000க்கும், ஒரு கிராம் ரூ.8,750க்கும் விற்பனையானது. இதனால், இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து விற்பனையானது.

Read More

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. பின்னர், இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகள் மேற்கொண்டது. அவற்றை தடுத்து நிறுத்தி, இந்திய படைகள் தாக்கி அழித்தன. இதன் பின்னர், அமெரிக்கா தலையீடு செய்ததால் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: ராகுல் அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒருமனதாக வேண்டுகோள் விடுக்கின்றன. ஆபரேஷன் சிந்தூர்…

Read More

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. ட்ரோல் செய்கிறவர்களும், செய்யப்படுவர்களும் என்கிற தலைப்பில். வழக்கமான மெட்டிரியலில் இருந்தது நீயா நானா. சமூக வலைதளங்களில் பத்தாண்டுகளுக்கு மேல் குப்பைக்கொட்டிக்கொண்டு இருக்கும் காரணத்தால் இதை சொல்லாம் என்று தோன்றுகிறது. சமூக வலைதளங்களில் ஏதோ ஒன்றை எழுதி ஏதோ ஒரு காரணத்தினால் அறிவு ஜீவியாக தன்னை உணர்ந்தவர்கள். சில வருடங்கள் கழித்து நிச்சயம் ஒரு பதிவை இட்டு இருப்பார்கள்.அது என்னவென்றால் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது, அதையே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருப்பது ஆபத்து. நமது நேரத்தை மட்டுமல்லாது நமது அறிவையும் தின்று தீர்க்கிறது என்று. இதை அவர்கள் சமூக வலைதளங்களில் தான் எழுதுகிறார்கள். என்பதும், அதை நாம் சமூக வலைதளங்களில் இருந்து தாம் படித்தாக வேண்டும் என்பதை அவர்கள் உணரமால் இல்லை . இருந்தும் இந்த கருத்து ஏன் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படுகிறது.? என்றால் அந்த தளம் இன்றி…

Read More