Author: Editor TN Talks

பாமக வன்னியர் சங்க மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாமக மாநில மாநாடு நடைபெறும் திடலில் 25க்கும் மேற்பட்ட எல்இடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதிலிருந்து பாமக தொண்டர்கள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்க உள்ளனர். இதற்காக 1,80,000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே, நிகழ்வுகளை காண 3 இடங்களில் ராட்சத எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 40×20 அளவில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாடு திடலில் 3,000 திற்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டை முன்னிட்டு இன்று மது கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர்…

Read More

தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “கவிப்பேரரசு திரு.வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைந்ததை அறிந்து வேதனையடைந்தேன். தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன் இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் pic.twitter.com/bbBpOeFHjx — வைரமுத்து…

Read More

நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். புதிய விவசாயி சின்னத்தில் கரும்பு மாற்றி ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளது. நாம் தமிழர் இயக்கம் 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றப்பட்டு, சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த கால தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும், வாக்கு சதவீதம் ஒவ்வொரு முறையும் அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்த நாம் தமிழர், சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி அல்லது மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும் எனும் விதிப்படி அங்கீகரிக்கப்படவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 6.58 சதவீத வாக்குகளை பெற்றதால், அங்கீகாரம் கிடைக்காமல், கரும்பு விவசாயி சின்னம் பறிபோயின. மக்களவைத் தேர்தலில் கேட்ட சின்னம் கிடைக்காமல், ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு,…

Read More

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து முப்படை அதிகாரிகள் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், இரு நாடுகளுக்கு இடையேயும் தரை, வான் மற்றும் கடல் மட்டத்தில் சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக கூறினார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் மேற்கொண்ட பொய் பிரச்சாரங்கள் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார். இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் மசூதிகளை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியதாக அவர் கூறினார். இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 , பிரம்மோஸ் ஏவுதள அமைப்பை தகர்த்ததாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் மேற்கொண்டது என அவர் கூறினார். இந்தியா நடத்திய தாக்குதில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார். பதான்கோட் , ஸ்ரீநகர் விமான தளங்கள்…

Read More

தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ச‍ென்னையில் பேரணி நடைபெற்றது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்று அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நடைபெறும் இந்த பேரணி சென்‍னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவுபெற்றது. இந்திய ராணுவத்தின் வீரத்தையும், அர்ப்பணிப்ப‍ையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் மாநில அரசு சார்பில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இதனிடையே இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நாட்டின் பாதுகாப்பு நலனுக்கு நாம் எப்போதும் துணை நிற்போம் எனக் கூறினர்.

Read More

நாட்டில் பிரசவத்தின் போது தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக இந்திய பதிவு அறிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் பிறக்கும் போது தாய்மார்கள் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 130 லிருந்து 93 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 39 லிருந்து 27 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாலின விகிதம் 2014 ஆம் ஆண்டு 899 ஆக இருந்து 2021 ஆம் ஆண்டு தொள்ளாயிரத்து 13 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து முப்படை அதிகாரிகள் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், இரு நாடுகளுக்கு இடையேயும் தரை, வான் மற்றும் கடல் மட்டத்தில் சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக கூறினார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் மேற்கொண்ட பொய் பிரச்சாரங்கள் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார். இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் மசூதிகளை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியதாக அவர் கூறினார். இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 , பிரம்மோஸ் ஏவுதள அமைப்பை தகர்த்ததாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் மேற்கொண்டது என அவர் கூறினார். இந்தியா நடத்திய தாக்குதில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார். பதான்கோட் , ஸ்ரீநகர் விமான தளங்கள்…

Read More

பாமக சார்பில் நாளை நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முழு கட்டுப்பாடுடன், இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் வந்து செல்ல வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை செல்ல அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். மாறாக, என்எச் 45 என அழைக்கப்படும் சென்னை – திருச்சி சாலை மார்க்கமாகவே மாநாட்டுக்கு செல்ல வேண்டும் என…

Read More

இந்திய – பாகிஸ்தான் இடையே நடைபெறும் பதற்றமான சூழலில் ஏவுகணைகள், டிரோன்களை விட அதிகமான வதந்திகளையே பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று இந்திய ராணுவம் எச்சரிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதே நாடு முழுவதும் பேச்சாய் இருக்கிறது. இதுவரை அடியும் பதிலடியுமாய் மாற்றி மாற்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தரை மார்க்கமாகத் தாக்குதல்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து வருகிறது. எல்லையோர மாநில மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையும் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? இந்தியாவின் அடுத்த நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது…

Read More

இந்தியா – பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக ‍நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் இன்று பிற்பகல் மூன்று முப்பத்தைந்து மணிக்கு இந்திய ராணுவ அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பேசியதாகவும், இதன‍ை அடுத்து இருதரப்பிலும் மாலை ஐந்து மணி முதல் சண்டையை நிறுத்திக்கொள்வது என ஒப்புக்‍கொண்டுள்ளதாகவும் கூறினார். வான், தரை மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் மாலை ஐந்து மணி முதல் சண்டை நிறுத்தம் செய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்திற்கு அமெரிக்கா விடியவிடிய முயற்சி மேற்கொண்டதகாவும், சண்டை நிறுத்தத்திற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அமெரிக்க…

Read More