Author: Editor TN Talks
பொதுவாகவே நிஜ உலகில் நடந்த சில நிகழ்வுகள் திரைப்படங்களாக வரும் போது அதனை மக்கள் கொண்டாடுவது உண்டு. காந்தி, காமராஜர் தொடங்கி அமரன் திரைப்படம் வரை நாட்டுக்காக ஒருவர் செய்த தியாகங்களை படங்களாக மக்கள் போற்றியது உண்டு. ஆனால் இவை அனைத்துமே, அவர்கள் மறைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்த ஒன்று. ஆனால் இன்றைய திரையுலகம் முழுக்க முழுக்க வியபாரமயமானதாக மாறிவிட்டது. குறிப்பாக பாலிவுட் திரையுலகம். நெப்போட்டிசம், குரூப்பிசம் என குறிப்பிட்டவர்களின் கைகளில் மட்டுமே புரண்டு வருகிறது பாலிவுட். அறிவியல், தொழில்நுட்பம் என வளர்ந்து வரக் கூடிய ஒரு நாட்டில், மக்களை முட்டாள்களாகவே வைக்கும் நோக்கில் படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர் பாலிவுட் பிரபலங்கள்.. இது தான் பாலிவுட் ரசிகர்களின் தலையெழுத்து என்று இருந்தால், தற்போது பாலிவுட் செய்திருக்கக் கூடிய செயல் மிகவும் கேடுகெட்ட, கீழ்தரமான ஒன்றாக உள்ளதாக, பொதுமக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலில்…
குரு ராகு ராசி கேது தனுசு துலாம் கிரகங்களின் பெயர்ச்சி என்பது நாள், மாதம், வருடம் என அமைகிறது. கிரக பெயர்ச்சி, வாக்கியம் மற்றும் திருக்கணிதம் பஞ்சாங்க அடிப்படையில் மாறுபடுகிறது. அந்த வகையில் திருக்கணிதப் படி, கடந்த மார்ச் 29 தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. இரண்டரை ஆண்டுகள் கும்பத்தில் இருந்த சனி பகவான், மார்ச் 29ல் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். கடந்த ஓராண்டாக ரிஷப ராசியில் இருந்த குரு பகவான், மே 15ம் தேதி ரிஷ ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மீனத்தில் இருந்த ராகு பகவான், மே 18ம் தேதி கும்ப ராசிக்கும், கன்னியில் இருந்த கேது பகவான், சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரக பெயர்ச்சிகள் திருக்கணித…
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்ச் சூழல் நிலவும் நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் நிதி அளிக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. நிதி தர வேண்டாம் என்று வலியுறுத்திய இந்தியா, வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம். இந்தியா உடனான போரில் மும்முரமாக இறங்கியுள்ளது பாகிஸ்தான். ஏற்கெனவே பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்த பாகிஸ்தானுக்கு, இந்த நிலை மோசமான விளைவுகளைக் கொடுத்துள்ளது. சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளக் கூட கடன் வாங்க வேண்டிய நிலை வந்துள்ளது. அதனால்தான் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் கேட்டுள்ளது பாகிஸ்தான். வாக்கெடுப்பு – புறக்கணிப்பு, வெளிநடப்பு ஆனால், பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கக் கூடாது என்று இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு…
ஒரே ஒரு படம், ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட ரசிர்களையும் தனது கிறங்க வைக்கும் அழகால் கட்டிப்போட்டவர் கயாடு லோஹர். ட்ராகன் படம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கதாநாயகன் ப்ரதீப் ரங்கநாதன் ஆகியோருக்கு கொடுத்த வரவேற்பைக் காட்டிலும் கதாநாயகி கயாடு லோஹருக்கு அபரிமிதமான வரவேற்பை பெற்றுத் தந்தது. வழித்துணையே என்ற ஒரு பாடலும் அதில் அவரது அழகும், திருமண நிச்சயதார்த்த விழாவில் அவர் போட்ட ஆட்டமும் கயாடு லோஹர் மீது இளைஞர்களை பித்தாக்கியது. அஸ்ஸாமில் பிறந்து புனேவில் வசித்து வருபவர் கயாடு லோஹர். 2021-ம் ஆண்டு கன்னடத்தில் முகில்பேட்டை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் 2022-ல் மலையாளத்தில் நடித்துப் பார்த்தார், அப்போதும் வரவேற்பு இல்லை. அதன்பிறகு தெலுங்கிலும், மராத்தியிலும் கூட நடித்தார். எதனாலோ அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் தமிழ் படவுலகம் கயாடு லோஹரை தாங்கி பிடித்துக் கொண்டது. ஒரே ஒரு படம் தான் ட்ராகன்.. அதன்பிறகு கயாடு லோஹர்…