Author: Editor TN Talks

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. குரு பெயர்ச்சியால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். மூன்றாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலனால் மேஷ ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது. 📅 முக்கிய நாட்கள்: குரு பெயர்ச்சி ஏற்படும் நேரத்தில்தான் முக்கிய யோகங்கள் உருவாகும். உங்கள் ஜாதகப்படி ஜன்ம குரு நிலை பொருந்துமா என்பதை கவனிக்கவும். மேஷ ராசிக்காரர்களே, 2025 குரு பெயர்ச்சி உங்கள் பணமும், புகழும் சேர்க்கும் காலமாக இருக்கலாம் — சிறிய திட்டமிடலால் பெரிய வெற்றி சாத்தியம்.

Read More

எம்புரான் எப்படி வந்திருக்கிறது? என்று தமிழ் சினிமா விமர்சகர்களிடம் கேட்டால், அவர்களின் பதில் தமிழ், தெலுங்கு சினிமாக்களை பார்த்து, மல்லுவுட் கமர்சியல் குப்பையாகி வருகிறது என்கிறார்கள். இந்த தூய சினிமா பார்வையாளர்கள். ஆனால் உண்மை என்ற ஒன்று உண்டு. அது என்னவென்றால். சினிமா என்பது, கலைகளில் புரளும் வணிகம். மல்லுவுட் எதார்த்த வகை சினிமாவுக்கு பெயர்போனது. அதன் பூலோகம் அப்படியானது இயல்பாகவே கம்யூனிஸ்ட் மனம் கொண்ட மக்கள் என்பதால் எல்லாவற்றையும் எளிமையாகவே எதிர்பார்ப்பார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் இந்திய சினிமா என்பது அது இந்தி சினிமாக்கள் தான். அது மேல்தட்டு மக்களின் கொண்டாட்டங்களையே திரையில் பிரதிபலித்தது. அதன் அளவில் அது அப்படி தான், இப்பொழுதுதான் மாறிக்கொண்டு இருக்கிறது. Animals, Jawan சினிமாக்கள் போல, தமிழும் தெலுங்கும் நடுத்தர மக்களை பிரதிபலித்தது. கன்னடம் இவர்களை பார்த்து அப்படியே பிரதி எடுத்துக்கொண்டது. வங்கமும், கேரளமும் தான் ஆர்ட் வகை சினிமா என்று சொல்லகூடிய மிகை…

Read More

மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுப காரியங்களுக்கு குருவின் அருள் தேவை. குரு பகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி மே 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம் 28ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித்தப்பஞ்சாங்கப்படி மே 14ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் இருந்து துலாம், தனுசு, கும்ப ராசியின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் கோடி நன்மைகளை பெறப்போகும் ராசிக்காரர்களைப் பார்க்கலாம். மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. குரு பெயர்ச்சியால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். மூன்றாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலனால் மேஷ ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது. ரிஷபம்:…

Read More

“தன் வினை தன்னை ஒரு நாள் வெச்சு செய்யும்” என்கிற பழமொழி இருக்கிறது அல்லவா?? அது சஸ்பென்ஸ் திரில்லர் வெப் தொடராக இருந்தால் எப்படி இருக்கும். கர்மா அந்த மாதிரி ஒரு நீண்ட கொரியன் சீரிஸ். யாருமற்ற ஒரு பாழடைந்த காம்ப்ளக்ஸ் தீப்பிடித்து எரிகிறது. முகம் எல்லாம் எரிந்து கைரேகை அழிந்து யாரென்றே தெரியாத ஒருவனை ஆபத்தான நிலையில் போலீஸ் காப்பாற்றி அவனை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு சிறிய விபத்தில் அதே மருத்துவமனையில் இருக்கும் தன் தந்தையை காண வரும் ஒருவன் தன் தந்தையை விபத்துக்குள்ளாக்குன காரோட்டியிடம் பேரம் பேசி பணம் வாங்கிக்கொள்கிறான். அது போலவே காதலர்கள் டேட்டிங் போக அதே இரவு அந்த பெண்ணிற்கு அவசரமாக போன் வர ” நான் குடித்திருக்கிறேன் வர முடியாது என்று சொல்லும் காதலனின் மனதை மாற்றி அந்த இரவில் அவர்கள் பயணமாக எதேச்சையாக ஒருவர் காரில் வந்து விழுகிறார். அந்த…

Read More

பாமக வன்னியர் சங்க மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாமக மாநில மாநாடு நடைபெறும் திடலில் 25க்கும் மேற்பட்ட எல்இடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதிலிருந்து பாமக தொண்டர்கள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்க உள்ளனர். இதற்காக 1,80,000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே, நிகழ்வுகளை காண 3 இடங்களில் ராட்சத எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 40×20 அளவில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாடு திடலில் 3,000 திற்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டை முன்னிட்டு இன்று மது கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர்…

Read More

தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “கவிப்பேரரசு திரு.வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைந்ததை அறிந்து வேதனையடைந்தேன். தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன் இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் pic.twitter.com/bbBpOeFHjx — வைரமுத்து…

Read More

நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். புதிய விவசாயி சின்னத்தில் கரும்பு மாற்றி ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளது. நாம் தமிழர் இயக்கம் 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றப்பட்டு, சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த கால தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும், வாக்கு சதவீதம் ஒவ்வொரு முறையும் அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்த நாம் தமிழர், சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி அல்லது மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும் எனும் விதிப்படி அங்கீகரிக்கப்படவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 6.58 சதவீத வாக்குகளை பெற்றதால், அங்கீகாரம் கிடைக்காமல், கரும்பு விவசாயி சின்னம் பறிபோயின. மக்களவைத் தேர்தலில் கேட்ட சின்னம் கிடைக்காமல், ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு,…

Read More

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து முப்படை அதிகாரிகள் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், இரு நாடுகளுக்கு இடையேயும் தரை, வான் மற்றும் கடல் மட்டத்தில் சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக கூறினார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் மேற்கொண்ட பொய் பிரச்சாரங்கள் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார். இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் மசூதிகளை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியதாக அவர் கூறினார். இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 , பிரம்மோஸ் ஏவுதள அமைப்பை தகர்த்ததாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் மேற்கொண்டது என அவர் கூறினார். இந்தியா நடத்திய தாக்குதில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார். பதான்கோட் , ஸ்ரீநகர் விமான தளங்கள்…

Read More

தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ச‍ென்னையில் பேரணி நடைபெற்றது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்று அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நடைபெறும் இந்த பேரணி சென்‍னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவுபெற்றது. இந்திய ராணுவத்தின் வீரத்தையும், அர்ப்பணிப்ப‍ையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் மாநில அரசு சார்பில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இதனிடையே இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நாட்டின் பாதுகாப்பு நலனுக்கு நாம் எப்போதும் துணை நிற்போம் எனக் கூறினர்.

Read More

நாட்டில் பிரசவத்தின் போது தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக இந்திய பதிவு அறிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் பிறக்கும் போது தாய்மார்கள் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 130 லிருந்து 93 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 39 லிருந்து 27 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாலின விகிதம் 2014 ஆம் ஆண்டு 899 ஆக இருந்து 2021 ஆம் ஆண்டு தொள்ளாயிரத்து 13 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More