Author: Editor TN Talks

கல்லூரி விழாவில் தன் ஆண் நண்பனுடன் தனியாக இருக்கும் பெண்ணை ( மோனிகா பன்வர்) கூட்டு பலாத்காரம் செய்கிறது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கும்பல் ஒன்று. இதனால் மனச்சிதைவுக்கு ஆட்பட்டு ஊரில் இருக்க முடியமால், ஆண் நண்பன்( அபிஷேக் சுக்லா) உதவியுடன் டெல்லிக்கு வருகிறாள். டெல்லியில் ஒதுக்குப்புறமான ஒரு அரசு நடத்தும் ஹாஸ்டலில் தங்குகிறாள். அந்த அறையில் அதற்கு முன்னர் வசித்து வந்த ஒரு பெண் இறந்து போக, நெடுநாள் அந்த அறை பூட்டியே கிடக்கிறது. அமானுஷ்யமான விஷயங்கள் அந்த அறையில் அவ்வப்போது நடக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் தோழிகளையும் வெளியே செல்லவிடமால் ஏதோ ஒன்று தடுக்கிறது. இந்த விஷயங்களை சொல்லி அந்த அறையில் தங்க வேண்டாம் என்று தன் காதலி மோனிகாவை தடுக்கிறார் காதலன் அபிஷேக். ஹாஸ்டலில் வசிக்கும் நான்கு பெண்களும் வேண்டாம் என்று சொல்லி எச்சரிக்கிறார்கள். மனமுடைந்த நிலையில் இருக்கும் மோனிகா இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி, அந்த…

Read More

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. 2011-ம் ஆண்டு “நுவ்வில்லா” என்ற நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். ”அர்ஜூன் ரெட்டி” திரைப்படம் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர். இவரது நடிப்பில் கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய் செலவில் உருவான லைகர் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திருமிரான பேச்சு தான் காரணம் என அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இந்த தோல்வியில் இருந்து மீள, அடுத்தடுத்து தனது கதைகளை நிதானமாக தேர்ந்தெடுத்தார் விஜய் தேவரகொண்டா. 2023-ம் ஆண்டு சமந்தாவுடன் ஜோடி சேர்ந்த இவர் நடித்திருந்த ”குஷி” திரைப்படம் ஓரளவு இருவருக்கு கைக் கொடுத்தது. விமர்சன ரீதியாக வரவேற்பை இப்படம் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பின்னடைவே சந்தித்தது. அதனை தொடர்ந்து கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ”தி ஃபேமிலி ஸ்டார்” திரைப்படமும் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை. தொடர் தோல்விகளில் இருந்து விஜய் தேவரகொண்டா…

Read More

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு. இதற்கெல்லாம் விடிவுகாலம் வெகு விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். * அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் போதிய மருத்துவர்கள் இல்லை எனவும், இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சொல்லொண்ணா…

Read More

சினிமா உலகில் நீண்ட நாள் திருமண உறவில் இருந்த பிரபலங்கள் விவாகரத்து பெறுவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. தனுஷ்-ஐஸ்வர்யா தொடங்கி, ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரகுமான் வழியே ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி பிரிவு வரை அடுத்தடுத்து பிரபலங்கள் விவாகரத்து செய்வது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது. ஜெயம் படம் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்த ரவி மோகன், 40-க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தனி ஒருவன், கோமாளி போன்ற வெற்றிப் படங்களை எப்போது இவர் தருவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, வெளியானது என்னவோ மனைவியை பிரிவதாக அவர் வெளியிட்ட விவாகரத்து அறிக்கை தான். 2009-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயக்குமாரின் மகளான ஆர்த்தி என்பவரை ரவி மோகன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், குடும்பமாக இவர்கள் வெளியிடும் புகைப்படங்களும்,…

Read More

குழந்தைகள் கொண்டாடும் ஃபேண்டஸி டிராமா “ மரகதமலை ”. கோடை கால கொண்டாட்டம்! L.G. Movies சார்பில் S.LATHHA தயாரிக்கும் படம் “ மரகதமலை . தமிழ் சினிமாவில் குழந்தைகள் ரசிக்கும் படங்கள், அவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த ஏக்கக்தை போக்கும் வகையில் இப்படம் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ஒரு பெண் டைரக்டர் கரடி,புலி மற்ற மிருகங்களுடன் அசத்தலாக அறிமுகமாகிறார். பெண் டைரக்டர்கள் சுதா கோங்குரா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ப்ரியா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஹலிதா சமீம், கிருத்திகா உதயநிதி வரிசையில் பெண் டைரக்டராக எஸ்.லதா. இப்படத்தை தயாரித்து, கதை திரைக்கதை, வசனம், பாடலை எழுதி இயக்குநராக எஸ்.லதா ( S.LATHHA ) அறிமுகமாகிரார். டைரக்டரான அனுபவத்தை அவர் கூறும் போது.. ராஜா ராணி கதைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சின்ன வயதில் பாட்டி, அம்மா சொல்லும் கதைகள் பல கேட்டு…

Read More

இந்தியா – பாகிஸ்தான் இடையே நான்காவது நாளாக போர் பதற்றம் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் வான்வழி தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் போன்றவை நடந்து வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டிய தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கி நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றுகாலை (10/5/02025) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசும்போது, வேண்டும் என்றே ஆத்திரமூட்டும் வகையில் பாகிஸ்தான் நடந்து வருவதாக பலமுறை தான் கூறியுள்ளதாக தெரிவித்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல்களையும், அவதூறுகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தியா தரப்பில் பொறுப்புடனும், சர்வதேச சமூகத்திற்கு பதிலளிக்கும் வகையிலும் எதிர்வினை நடத்தப்படுவதாக அழுத்தம் திருத்தமாக கூறினார். பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே பாகிஸ்தானின் செயல்கள் அமைந்துள்ளன.…

Read More

பொதுவாகவே நிஜ உலகில் நடந்த சில நிகழ்வுகள் திரைப்படங்களாக வரும் போது அதனை மக்கள் கொண்டாடுவது உண்டு. காந்தி, காமராஜர் தொடங்கி அமரன் திரைப்படம் வரை நாட்டுக்காக ஒருவர் செய்த தியாகங்களை படங்களாக மக்கள் போற்றியது உண்டு. ஆனால் இவை அனைத்துமே, அவர்கள் மறைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்த ஒன்று. ஆனால் இன்றைய திரையுலகம் முழுக்க முழுக்க வியபாரமயமானதாக மாறிவிட்டது. குறிப்பாக பாலிவுட் திரையுலகம். நெப்போட்டிசம், குரூப்பிசம் என குறிப்பிட்டவர்களின் கைகளில் மட்டுமே புரண்டு வருகிறது பாலிவுட். அறிவியல், தொழில்நுட்பம் என வளர்ந்து வரக் கூடிய ஒரு நாட்டில், மக்களை முட்டாள்களாகவே வைக்கும் நோக்கில் படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர் பாலிவுட் பிரபலங்கள்.. இது தான் பாலிவுட் ரசிகர்களின் தலையெழுத்து என்று இருந்தால், தற்போது பாலிவுட் செய்திருக்கக் கூடிய செயல் மிகவும் கேடுகெட்ட, கீழ்தரமான ஒன்றாக உள்ளதாக, பொதுமக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலில்…

Read More

குரு ராகு                       ராசி         கேது தனுசு துலாம் கிரகங்களின் பெயர்ச்சி என்பது நாள், மாதம், வருடம் என அமைகிறது. கிரக பெயர்ச்சி, வாக்கியம் மற்றும் திருக்கணிதம் பஞ்சாங்க அடிப்படையில் மாறுபடுகிறது. அந்த வகையில் திருக்கணிதப் படி, கடந்த மார்ச் 29 தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. இரண்டரை ஆண்டுகள் கும்பத்தில் இருந்த சனி பகவான், மார்ச் 29ல் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். கடந்த ஓராண்டாக ரிஷப ராசியில் இருந்த குரு பகவான்,  மே 15ம் தேதி ரிஷ ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மீனத்தில் இருந்த ராகு பகவான், மே 18ம் தேதி கும்ப ராசிக்கும், கன்னியில் இருந்த கேது பகவான், சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரக பெயர்ச்சிகள் திருக்கணித…

Read More

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்ச் சூழல் நிலவும் நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் நிதி அளிக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. நிதி தர வேண்டாம் என்று வலியுறுத்திய இந்தியா, வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம். இந்தியா உடனான போரில் மும்முரமாக இறங்கியுள்ளது பாகிஸ்தான். ஏற்கெனவே பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்த பாகிஸ்தானுக்கு, இந்த நிலை மோசமான விளைவுகளைக் கொடுத்துள்ளது. சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளக் கூட கடன் வாங்க வேண்டிய நிலை வந்துள்ளது. அதனால்தான் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் கேட்டுள்ளது பாகிஸ்தான். வாக்கெடுப்பு – புறக்கணிப்பு, வெளிநடப்பு ஆனால், பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கக் கூடாது என்று இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு…

Read More