Author: editor5

பழனியில் ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் உள்ள மில் ரோடு பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்யபாமா இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று அதிகாலையில் தீவிர சோதனை நடத்தினர். கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியின்போது நில அளவீட்டில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சிக்கிய இவரது சொத்துக்களை ஆராயும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்யபாமா நெடுஞ்சாலைத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். சமீபத்தில் மே மாதம் ஓய்வு பெறுவதற்கு முன்பாக சென்னையில் பணியாற்றி வந்தார். கரூரில் சாலை திட்டத்தின் நில அளவீடு தொடர்பான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பணியில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஈடுபட்ட நான்கு அதிகாரிகள்…

Read More

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் நகருக்கு இன்று வருகை தந்துள்ளார். இந்த பயணத்தின் முதல் நிகழ்வாக, இந்து மதத்தின் முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் அவர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். காலை நேரத்தில் கோயிலுக்கு வந்த அமைச்சரை, காஞ்சி சங்கர மடம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக வரவேற்றனர். கோயில் நுழைவு வாயிலில் மலர்தூவி, பாரம்பரிய இசை முழங்க, அவருக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் தங்கக் கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகளை மேற்கொண்டார். இந்த சமயத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான…

Read More

திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு. தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை (டி.வி.ஏ.சி.) அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு தொடர்புடைய 13 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்கு முன்னதாக, சாலை அமைப்புப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, நான்கு இடங்களில் சாலை அமைக்காமலேயே பணம் செலுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எ.வ.வேலு, கண்ணன், பூபாலன், பெரியசாமி, சத்தியபாமா உள்ளிட்டோர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தச் சோதனை நடவடிக்கைக்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.…

Read More

இன்று ஜூன் 25, “சம்விதான் ஹத்யா திவஸ்” என்று அனுசரிக்கப்படும் நாள். 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்த அவசரநிலை (Emergency) மூலம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உணர்வையே படுகொலை செய்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் நாள் இது. அன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலை குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியது. பத்திரிகை சுதந்திரம் தீவிரமாகத் தடை செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அந்த இருண்ட காலகட்டம், ஜனநாயகம் எவ்வளவு நுட்பமானது என்பதையும், அதைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு நினைவூட்டும் முக்கிய வரலாற்றுப் பாடமாகும். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில் இதை வலியுறுத்தியுள்ளார். “இந்த நாள் அரசியல் சாசனத்தின் உயரிய மதிப்பையும், ஜனநாயகக் கொள்கைகளின் வலிமையையும் நினைவுபடுத்துகிறது. கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, ஒவ்வொரு…

Read More

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, மாவட்ட அளவில் போதைப் பொருட்களின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று, போதைப் பழக்கத்தின் தீமைகளை உணர்ந்தனர். பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார். பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே குரலில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று, “போதை ஒழிப்பு – இளைய தலைமுறை மீட்பு”, “போதைக்கு அடிமையானால் எதிர்காலம் அழியும்”, “பள்ளியில் கல்வி, வாழ்வில் வெற்றி” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய…

Read More

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா நச்சு வாயு கசிவு விபத்து தமிழ்நாட்டு மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் ஏற்கெனவே 10 பேர் உயிரிழந்த நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒரு பெண் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இறால்களை நீண்ட நாட்கள் பதப்படுத்தி வைக்கும் நோக்கில் அமோனியா வாயுவைப் பயன்படுத்தி வந்த இந்த ஆலை, திருவள்ளூர் பகுதியில் இயங்கி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலையின் முக்கியக் குழாயில் திடீரென ஏற்பட்ட விரிசல் காரணமாக, அதிக நச்சுத் தன்மை கொண்ட அமோனியா வாயு ஆலை முழுவதும் பரவியது. இதனால் அங்கு பணியாற்றிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறல், கண்களில் எரிச்சல், கடும் மயக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளுடன் அவர்கள் தவித்தனர். உடனடியாக…

Read More

நிலநடுக்கத்தின் மையப்புள்ளியின் 50 கிலோ மீட்டராக இருந்தது என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வெனிசுலாவில் சில மணி நேரங்களுக்கு முன்பு ஏற்பட்ட இரு பெரிய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்கு பகுதியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்தபடி, இன்று காலை 7:30 மணிக்கு (உள்ளூர் நேரம்) இவாத்தே மாகாணத்தின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஆழம் சுமார் 50 கிலோமீட்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. இது பலருக்கு நிம்மதியை அளித்துள்ளது. நிலநடுக்கம் ஆமோரி மாகாணத்தின் ஹஷிகாமி பகுதியில் ஜப்பான் அளவுகோல் படி 6-ஐ தாண்டிய தீவிரத்துடன் உணரப்பட்டது. ஹச்சினோஹே நகரில் 5-க்கு மேல் தீவிரம் பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது ஒளிபரப்பு நிறுவனமான…

Read More

சென்னை: தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான ‘நான் முதல்வன்’ உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை மூலம் ஏராளமான இளைஞர்கள் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இத்திட்டம் தமிழ்நாடு அரசின் இளைஞர் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “பயனாளிகளுக்கான உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாதத்துக்கான உதவித் தொகை ஏற்கெனவே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுவிட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

Read More

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வரும் திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு, கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டவர். கட்சி மற்றும் அரசு இரண்டிலும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியை இழந்த நிலையிலும், அக்கட்சியின் சட்டமன்ற கொறடா பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய முக்கிய பதவி அமைப்பு, கட்சியினரிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எ.வ.வேலுவுக்கு எதிராக கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2012-ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்து, அவரது பல இடங்களில் சோதனை நடத்தியது. பின்னர் 2015-ஆம் ஆண்டு அந்த வழக்கிலிருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவரது பெயர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிய வண்ணமே உள்ளது. 2023 நவம்பர் மாதம் அமைச்சர் எ.வ.வேலுவின்…

Read More

பொதுமக்கள், தங்களுடைய செல்ல பிராணிகளை தூக்கிக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். வெனிசுலாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இது நாட்டின் சமீபகால வரலாற்றில் மிகப் பலமான நில அதிர்வாகப் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) படி, முதல் நிலநடுக்கம் 7.1 முதல் 7.2 ரிக்டர் அளவிலும், அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் (சுமார் 45 வினாடிகளுக்கு 1 நிமிடத்தில்) 7.5 ரிக்டர் அளவிலும் பதிவானது. இரண்டும் மொரோன் (Morón) நகருக்கு அருகில், காரகாஸ் நகருக்கு மேற்கே சுமார் 168 கி.மீ. தொலைவில் ஏற்பட்டன. இரண்டாவது நிலநடுக்கத்தின் மையம் மொரோனுக்கு 16 கி.மீ. தொலைவில் இருந்தது. காரகாஸ் உள்ளிட்ட பல நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. தெருக்களில் புழுதி பறந்தது. உணவு விடுதிகள், கடைகளில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். பலர் தங்கள் செல்லப் பிராணிகளைத் தூக்கிக்கொண்டு வீடுகளை விட்டு…

Read More