Author: editor5

உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கு இருந்தால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது இணையதளம் மற்றும் தொடர்புடைய சேவைகளில் பெரிய அளவிலான தொழில்நுட்ப மேம்படுத்தல் பணியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக ஜூன் 26 முதல் ஜூன் 28, 2026 வரை முக்கியமான PF தொடர்பான ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன. இந்த காலகட்டத்தில் உறுப்பினர் போர்ட்டல், முதலாளி போர்ட்டல், UMANG செயலி, e-Passbook உள்ளிட்ட அனைத்து முக்கிய தளங்களும் பாதிக்கப்படும். புதிய PF கோரிக்கைகள் சமர்ப்பித்தல், முன்பணம் (advance) விண்ணப்பங்கள், கோரிக்கை செயலாக்கம், ECR தாக்கல், UAN இணைப்பு போன்ற சேவைகள் முழுமையாக முடக்கப்படும். EPFO இந்த மாற்றத்தை எதிர்காலத்தில் சேவைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் வழங்குவதற்காக செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. EPFO அதிகாரிகள் கூறுகையில், “தரவுத்தள ஒருங்கிணைப்பு (database consolidation) மற்றும் மென்பொருள்…

Read More

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், வரும் 30-ம் தேதி அண்ணாமலை மீண்டும் டி.ஆர்.பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த உள்ளார். தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாமலை – டி.ஆர்.பாலு அவதூறு வழக்கின் விசாரணை வரும் ஜூன் 30-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் தொடர்ந்து குறுக்கு விசாரணை நடத்த தயாராகி வருகிறார். பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது தி.மு.க. அரசுக்கு எதிராக தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அண்ணாமலை, கப்பல் தொடர்பான ஒப்பந்தத்தில் டி.ஆர்.பாலு ஊழல் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு…

Read More

பெ.சண்முகம் களமாடியதும், போராடியதும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். முரசொலி நாளிதழில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம் குறித்து வெளியான செய்தியை வன்மையாகக் கண்டித்துள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன். அந்த செய்தி அநாகரிகத்தின் உச்சம் என்று விமர்சித்த அவர், அரசியல் விவாதங்கள் நாகரிக எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அர்ப்பணித்த மாமனிதர் பெ.சண்முகம். காவேரி கரையோரத்தில் பிறந்த அவர், சிவப்புத் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தவர். அவரது பங்களிப்பை ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது. ஒரு மனிதன் ஒரு ஆயுளில் செய்யக்கூடியதை விட அதிகமாக அவர் சாதித்துள்ளார்” என்று புகழ்ந்த அமைச்சர், அத்தகைய தலைவரை அவமதிக்கும் வகையில் முரசொலி எழுதியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். “அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவை மரியாதைக்குரிய எல்லைக்குள் இருக்க வேண்டும்.…

Read More

50 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் விஜய் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் பள்ளியில் காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த முகாம் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தீவிரமாக நடைபெற உள்ளது. அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு இயக்கத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 43,051 மையங்களில் இந்த மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், குழந்தைகள் பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் அனைத்தும்…

Read More

தூய்மை பணிகளை தனியாருக்கு டெண்டர் விடும் முடிவை தமிழக அரசு கைவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, மாநகராட்சிகளின் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையை அறிமுகப்படுத்த முயன்ற திட்டத்தை, எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ரத்து செய்துள்ளது. இந்த முடிவு, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் கருதப்படுகிறது. ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஆலோசகர்களைத் தேர்வு செய்ய டெண்டர் அழைப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை, தூய்மைப் பணிகளை படிப்படியாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியின் முதல் கட்டமாகப் பார்க்கப்பட்டது. அரசு நேரடியாக நிர்வகிக்கும் பணிகளில் தனியார் பங்களிப்பை அதிகரித்து, செயல்திறனை உயர்த்தலாம் என்பது அரசின் எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும், டெண்டர் வெளியான சில நாட்களுக்குள் பல்வேறு…

Read More

கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்று வரும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் பங்கேற்காதது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து கூட்டத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. மதிமுகவின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று காலை சென்னையில் தொடங்கியது. கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில் செல்வன் வராதது குறித்து பேசப்பட்டது. அப்போது கட்சி வட்டாரங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. “செந்தில் செல்வன் உயர்நிலைக்குழு உறுப்பினரல்ல. எனவே அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மட்டுமே இந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டத்தில் பங்கேற்பார்கள்” என்று தெளிவுபடுத்தப்பட்டது. இந்த விளக்கம் கட்சிக்குள் சில அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதிமுகவின் இந்த…

Read More

விளைச்சல் இல்லாததால், தமிழகத்திற்கான காய்கறி வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினசரி லாரிகளில் வந்து கொண்டிருந்த காய்கறிகளின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள காய்கறி தேவையில் பெரும் பகுதி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சில சமயங்களில் தெலுங்கானா ஆகியவற்றிலிருந்து பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது அந்த மாநிலங்களில் வானிலை மாற்றம் மற்றும் பிற காரணங்களால் உற்பத்தி குறைந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட நகர்ப்புற சந்தைகளுக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. தற்போதைய விலை நிலவரம் (ஒரு கிலோ): பீன்ஸ்: ரூ.90 முதல் ரூ.120 தக்காளி: ரூ.26 முதல்…

Read More

நடைபாதை திட்டப் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை மறு ஆய்வு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நகரின் முக்கிய சாலைகளில் நடைபாதை அமைக்க ரூ.284 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட திட்டத்தின் 35 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு முறைகேடுகள், செயற்கையான செலவு உயர்வு மற்றும் சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர்கள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய விரிவான ஆய்வில், திட்ட அறிக்கையில் பல அடுக்கடுக்கான குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, ஒரு மீட்டர் நடைபாதை அமைக்கும் வழக்கமான விலையை விட நான்கு மடங்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தேவையில்லாத கூடுதல் பணிகளைச் சேர்த்து திட்ட செலவை வேண்டுமென்றே உயர்த்தியதன் மூலம் அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்த முயற்சி நடந்ததும் அம்பலமாகியுள்ளது. சில ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கெனவே சாதகமான வகையில் டெண்டர்கள் தயாரிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த திட்டம் அடையார்…

Read More

விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. விருதுநகர்: விளையாட்டுத்துறை சார்பில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா விருதுநகரில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இடம்பெற்றிருந்தது. இரண்டாவது இடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இருந்தது. இந்த பெயர் வரிசைக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார். இதனால் விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, பேனரைப் பார்த்ததும் அதிருப்தி அடைந்தார். தான் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் தனது பெயர் முதலில் இடம்பெற வேண்டும் எனக் கூறினார். ஆட்சியரிடம் பேசிய அவர், “ஒரு மாவட்டத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் பொறுப்பு அமைச்சரின் பெயர்தான் முதலில் இருக்க…

Read More

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் 235 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலா நேற்று பயங்கர நிலநடுக்கங்களால் நிலைகுலைந்தது. ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் அதைத் தொடர்ந்து 39 வினாடிகளில் 7.5 என்ற மிக அதிக தீவிரத்துடன் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது நாட்டின் சமீபத்திய வரலாற்றில் மிகப் பெரிய பூகம்பமாக பதிவாகியுள்ளது. 1900ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கம் இதுவென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியுள்ளது. லாகுவைரா (La Guaira) பகுதியை மையமாகக் கொண்டு, தலைநகர் கராகஸிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கங்கள் உருவாகின. ஆழம் சுமார் 10-22 கிலோமீட்டர் என்ற அளவில் இருந்ததால் அதிர்வுகள் மிகக் கடுமையாக உணரப்பட்டன. கராகஸ் உள்பட நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது, தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும்…

Read More