Close Menu
    What's Hot

    ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் பெற்ற தவெக ஊராட்சி மன்ற தலைவர்?- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

    பண்ணைக்குள் புகுந்து அட்டகாசம்!. வெறிநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக்குஞ்சுகள் பலி!. அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!
    Featured

    மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!

    Editor web1By Editor web1July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 15 07h34m11s415
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறை தலைமை வார்டன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஏத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35). தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, ஜூலை 9-ம் தேதி தென்தாமரைக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, ஜூலை 13-ம் தேதி அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து, இது காவல்துறையினரின் சித்திரவதையால் ஏற்பட்ட ‘கஸ்டோடியல் மரணம்’ (காவல் மரணம்) எனக் குற்றம்சாட்டி சபரி வர்மனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில், சிறப்பு மருத்துவக் குழுவினர் நடத்திய ஆரம்பக்கட்ட உடற்கூறு ஆய்வில் சபரி வர்மனின் உடலில் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    vlcsnap 2026 07 15 07h33m30s194

    உடலின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 19 காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த காயங்கள் அனைத்தும் மரணத்திற்குச் சற்று முன்பு ஏற்பட்டவை என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். திசு ஆய்வு மற்றும் ரசாயன பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே முழுமையான மரணக் காரணம் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என கூறப்படுகிறது.

    இந்தநிலையில், நீதித்துறை விசாரணை மற்றும் உடற்கூறு ஆய்வு அறிக்கையின் முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், நாகர்கோவில் கிளைச் சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார் மற்றும் திருவுடை நம்பி (சுரேஷ்) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளி ஒருவர் சிறையில் அடித்துக் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு!
    Next Article மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!
    Editor web1
    • Website

    Related Posts

    ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் பெற்ற தவெக ஊராட்சி மன்ற தலைவர்?- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

    July 15, 2026

    பண்ணைக்குள் புகுந்து அட்டகாசம்!. வெறிநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக்குஞ்சுகள் பலி!. அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!

    July 15, 2026

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் பெற்ற தவெக ஊராட்சி மன்ற தலைவர்?- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

    பண்ணைக்குள் புகுந்து அட்டகாசம்!. வெறிநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக்குஞ்சுகள் பலி!. அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

    மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.