Author: editor5
தமிழ்நாட்டில் திமுக அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஒடிசா தின விழாவை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் ஒடிசா மக்களின் முக்கிய அமைப்பான ‘தி உத்கல் அசோசியேஷன் மெட்ராஸ்’ சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களே மையப் பங்கு வகிப்பவர்கள் என வலியுறுத்தினார். “தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பாஜகவின் வெற்றிக்குப் பின்னால் மக்களின் பேராதரவு உள்ளது” என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் திமுக அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் விமர்சித்தார். கல்வித் துறை சார்ந்த…
சிங்கப்பெண் அதிரடிப்படை பல் இல்லாத அமைப்பாக இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் விமர்சித்துள்ளன என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள், சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் தனது கருத்துகளை வலியுறுத்தினார். தூத்துக்குடி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சரான ஸ்ரீநாத், தூத்துக்குடியை துறைமுக நகரமாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட தமிழிசை, “முதலில் தங்கள் தொகுதியின் நிலவரம், மக்களின் அன்றாட பிரச்னைகள் ஆகியவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தொகுதி பிரச்னைகளை அறியாமல் பெரிய வாக்குறுதிகளை அளிப்பது பொருத்தமற்றது” என்றார். மக்கள் இத்தகைய அரசியல் நடவடிக்கைகளை விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு…
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை வரும் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force – SSF) என்ற பெயரில் புதிய சிறப்பு போலீஸ் அணி உருவாக்கப்பட்டு, ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் படை மூலம் பொது இடங்களில் பெண்கள் பயமின்றி நடமாடும் சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். முதலமைச்சர் பொறுப்பேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு இந்தப் படையை அமைக்கப் போவதாக விஜய் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெகு விரைவில் நடைமுறைக்கு வந்தது. படையின் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (IG) பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரே ‘சிங்கப்பெண்’ என்ற பெயரைப் பரிந்துரை செய்ததாகவும், முதலமைச்சர் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…