Close Menu
    What's Hot

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மக்களின் நிராகரிப்பால் விரக்தியில் காங்கிரஸ் தலைவர்கள்..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு..!!
    தமிழ்நாடு

    மக்களின் நிராகரிப்பால் விரக்தியில் காங்கிரஸ் தலைவர்கள்..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு..!!

    editor5By editor5May 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் திமுக அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    ஒடிசா தின விழாவை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் ஒடிசா மக்களின் முக்கிய அமைப்பான ‘தி உத்கல் அசோசியேஷன் மெட்ராஸ்’ சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களே மையப் பங்கு வகிப்பவர்கள் என வலியுறுத்தினார்.

    “தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பாஜகவின் வெற்றிக்குப் பின்னால் மக்களின் பேராதரவு உள்ளது” என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் திமுக அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் விமர்சித்தார். கல்வித் துறை சார்ந்த பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேசிய அமைச்சர், சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

    சென்னை மற்றும் கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து இந்தக் கோளாறை முற்றிலுமாகத் தடுக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்கள் விரைவில் வழங்கப்படும். அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வரவேற்ற தர்மேந்திர பிரதான், புதிய முதலமைச்சர் விஜய் பதவியேற்றதை பாராட்டினார். “முதலமைச்சர் விஜயின் தலைமையிலான அரசு, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணக்கமாக இணைந்து செயல்படும் என்று நம்புகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி ஆற்றும் பங்களிப்பு மகத்தானது” என்று குறிப்பிட்டார்.

    பி.எம்.ஸ்ரீ உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய திட்டங்களை தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகள் குறித்தும் அவர் விமர்சனம் செய்தார். “மக்களின் நிராகரிப்பால் காங்கிரஸ் தலைவர்கள் விரக்தியில் உள்ளனர். ராகுல் காந்தி தன்னை ஜமீன்தாரராக நாட்டை ஆளலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். ஆனால் மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக உள்ளது” என்றார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் சிபிஐ விசாரணையில் உள்ளதாகவும், விசாரணை முடிவுக்குப் பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் அமைச்சர் கூறினார்.

    தமிழக வெற்றி கழக அரசில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராஜ் மோகன், இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியது இந்தச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒடிசா மக்களின் பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மத்திய-மாநில உறவுகளை வலுப்படுத்தும் விதமாக அமைந்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு”!. மதுரை சிறுவன் கொலைக்கு கனிமொழி கடும் கண்டனம்!
    Next Article தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கு? முதல்வர் விஜய்யை சாடிய நயினார் நாகேந்திரன்..!!
    editor5

    Related Posts

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    May 30, 2026

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    May 30, 2026

    நாளை கடைசி நாள்! உடன்பிறப்பின் குரலில் கருத்துப் பதிவு செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    நாளை கடைசி நாள்! உடன்பிறப்பின் குரலில் கருத்துப் பதிவு செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்!

    தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை.. நீங்க ஏன் பதறுறீங்க..?? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி..!!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ஸ்கூட்டியில் சீறிய நல்ல பாம்பு!. அரசு பேருந்துக்குள் புகுந்ததால் பரபரப்பு!. அலறிய பயணிகள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.