சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருப்பூர் அருகே அமைந்துள்ள சித்திரகுப்தர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணியுடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமி நாளில் சித்திரகுப்தரை வழிபட்டால் தங்களது பாவக்கணக்குகள் குறைக்கப்படும் என நம்பப்படுவதால் சித்திரகுப்தரை  தரிசிக்க பக்தர்கள் ஆர்வமுடன் திரண்டனர்.

இதனால் கோயில் முன்பாக இரண்டு கிலோ மீட்டர்  தொலைவிற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சித்திரகுப்தரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அன்னாதானம் வழங்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version