தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது. 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்பதால், இந்தக் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த நினையில், கத்திரி வெயில் காலத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்புள்ளதாகவும், சுப்பர் எல் நினோ நிகழ்வால் இயல்புக்கு மாறாக ஆகஸ்ட் வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜுன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மே 23ம் தேதி முதல் 25-ம் தேதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். பருவமழை முன்னதாக தொடங்கினாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை அளவு இயல்பை விட குறைவாகவே பதிவாகும் எனவும், தமிழ்நாட்டில் சராசரியாக 33 செ.மீ பருவமழை இந்தாண்டு குறைவாகவே பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version