Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»மீண்டும் தீவிரமாகும் இஸ்ரேல்-ஈரான் மோதல்… மத்திய கிழக்கில் போர் பதற்றம்…
    உலகம்

    மீண்டும் தீவிரமாகும் இஸ்ரேல்-ஈரான் மோதல்… மத்திய கிழக்கில் போர் பதற்றம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2025Updated:June 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்த, பதிலுக்கு காசா மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல், பிறகு போராக மாறி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் பெரும் சேதத்தை சந்தித்ததால், ஆத்திரமடைந்த ஈரான், ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.

    இந்த இரு நாடுகளுக்கும் ஆதராவகவும், எதிராகவும் பல நாடுகள் தங்கள் முன்னெடுப்புகளை எடுக்க, அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது. அத்தோடு அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், 6-வது சுற்று பேச்சுவார்த்தை நாளை (15.06.2025) ஓமனில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே அணுஆயுத பலம் பொருந்திய ஈரானின் அணு ஆயுதபடுகொலைக்கு ஒருபோதும் ஆளாகக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் முடிவெடுத்துள்ளார்.

    4

    மேலும் ஈரான் – அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு எதிராக நெதன்யாகு பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறார். ஒருவேளை இருநாடுகளுக்கும் இடையே அணுஆயுத ஒப்பந்தம் நிறைவேறினால், ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை அமெரிக்கா விலக்கி விடும் எனவும், அவ்வாறு விலக்கினால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதில் தடை ஏற்பட்டு விடுமென கருதுவதாக கூறியிருக்கிறார்.

    ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கான 3-வது செறிவூட்டும் மையம் ஒன்றை ஈரான் நிறுவ இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து இஸ்ரேல் நேற்று (13.06.2025) ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. அணுசக்தி மையங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் அடங்கிய ராணுவ தளங்கள்,
    வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் 200-க்கு மேற்பட்ட போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து துல்லியமாக தாக்கின. ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    6

    இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஈரானின் ராணுவ உயரதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உட்பட பல முக்கிய நகரங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஈரான் அணுஆயுத பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையே ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேரளாவில் காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்
    Next Article விஜய் விருது விழா – நாளை 4-வது மற்றும் இறுதிகட்ட விழா
    Editor TN Talks

    Related Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    July 22, 2026

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.