Close Menu
    What's Hot

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கேரளா : வீடுகளுக்குள் புகுந்த கடல்நீர்… 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…
    இந்தியா

    கேரளா : வீடுகளுக்குள் புகுந்த கடல்நீர்… 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவு, மரங்கள் விழுவது, கட்டிடங்கள் இடிந்து விழுவது என தொடர்பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

    13 5

    இந்த நிலையில் எர்ணாகுளம் மாவட்டம் கண்ணமலை செல்லானம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் மற்றும் கடல் அலையால் ஏற்பட்ட அரிப்பால் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கண்ணமாலையில் மட்டும் சுமார் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு சில வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியது. வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்தன. பலர் உறவினர் வீடுகளுக்கும் வாடகை வீடுகளுக்கும் இடம்பெயர்ந்து உள்ளனர். வயதானவர்கள், நோயாளிகள் என பலர் வீடுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

    இப்பகுதி மக்கள் பல வருடங்களாக கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பால் ஏற்படும் சேதங்களை சரி செய்ய தடுப்புச் சுவர் கட்டுவதற்காக பல முறை மனு அளித்தும் கேரள அரசு இதுவரை செவி சாய்க்காததால் தொடர் ஆபத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.
    மேலும் வீடுகளுக்குள் மார்பளவுக்கு புகுந்த தண்ணீரால் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வீணாகிவிட்டதாகவும், வாழ்வாதாரம் இழந்து நிற்பதாகவும் கவலை தெரிவிக்கும் மக்கள், அரசு தங்களை உடனடியாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், மேலும் இப்பகுதியில் கடல் நீர் புகுவதை தடுக்க உறுதியான தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    12 5

    கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள் கடந்த இரண்டு தினங்களாக தங்க இட வசதி இன்றி, தன்னார்வலர்கள் தரும் உணவு மருந்து பொருட்களை பயன்படுத்தி வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்…
    Next Article சேலம் : ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டு… ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா?
    Editor TN Talks

    Related Posts

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    July 6, 2026

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    July 6, 2026

    ஜம்மு – காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு!. மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.